Skip to main content

We Went to Kanchipuram

காஞ்சிபுரம்

நேற்று (20-09-2017, புதன்கிழமை) காலை 7 மணிக்கு நாங்கள் மூன்று பேர் டாக்ஸியில் காஞ்சிபுரம் புறப்பட்டோம். கிட்டத்தட்ட 80 கிமீ தூரத்தில் இருக்கும் ஊர்.  Me, Vijaya, Pattu Manni

போகும் வழியில் ஸ்ரீ ராமானுஜர் ஸ்வாமிகள் பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூர் சென்று அவரது கோயிலுக்கு சென்றோம். ஸ்வாமிகளின் 1000-வது ஜன்ம தினம் சமீபத்தில் கொண்டாடப்பெற்றது. அழகான கோயில்.

அடுத்த ஸ்டாப் - காலை உணவு. காஞ்சிபுரத்திற்கு அருகில், பெங்களூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள சரவணா பவன் ஓட்டல். பொங்கல், இட்லி சாப்பிட்டோம்.

இந்தப் பாதையிலிருந்து இடது புறம் திரும்பும் வீதியில் போய், ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை தரிஸித்தோம். ஏகாம்பரேஸ்வரர், முருகன், கைலாசநாதர், காளிகாம்பாள், கச்சபேஸ்வரர் ஆகிய கோயில்களுக்கு சென்றோம். Gave Rs 3000.00 at Kachabeswarar koil for Annadhanam.

இரவு 8-30க்கு வீடு திரும்பினோம். காஞ்சியில் 1008 கோயில்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு மட்டுமே கூட்டம் கூடுகிறது. ஏகாம்பரேஸ்வரர், வரதராஜ பெருமாள் கோயில்களுக்கும் கூட்டம் வருகிறது; இந்தக் கோயில்களும் நல்ல வெளிச்சத்துடன் நன்றாக பராமரிக்க படுகின்றன.

கைலாசநாதர் கோயிலில் சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் அற்புதமாக இருந்தும் வரும் மக்கள் மிக மிக குறைவு. கச்சபேஸ்வரர் கோயிலும் இவ்வாறே. இருட்டில் உள்ளன.

ஒரு விஷயம் -- காஞ்சியில், அம்மனுக்கென்று தனி கோயில்களோ, தனி சன்னிதிகளோ கிடையாது. காமாக்ஷி அம்மன் மட்டுமே !!

சாப்பிட ஓட்டல்கள் நிறைய உள்ளன; சுவையும் நிறைவு, பணமும் குறைவு.

Rajappa
21-09-2017

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை