Skip to main content

Posts

Showing posts from August, 2012

Mylapore

மயிலாப்பூர். நேற்று (16/08/2012) மாலை நாங்கள் இருவரும் மயிலாப்பூர் சென்றோம். மயிலாப்பூர் கோயிலுக்குச் சென்று நான்கு மாதங்களுக்கும் மேல் ஆகி விட்டது. முதலில் தெற்கு மாட வீதி வழியாகச் சென்று, சில காய்கறிகள் வாங்கினோம். மிதி பாகற்காய், சுண்டைக்காய், களாக் காய், சில கொட்டை வகைகள் போன்ற அரிதானவற்றை வாங்கினோம். பின்னர் கோயில் நோக்கி புறப்பட்டோம். வழியில், ”ஜன்னல் கடையில்” மிளகாய் பஜ்ஜி, உ.கிழங்கு போண்டா ஆகியவற்றை சாப்பிட்டோம். இந்த கடையைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். கூட்டம் இன்னும் குறையவில்லை. பஜ்ஜியும், போண்டாவும் “பறந்து” கொண்டிருந்தன. விலையைத் தான் ஏற்றி விட்டார்கள். கோயிலில் வழக்கம்போல பக்தர்கள் கூட்டம். பளபளவென்றிருந்தது. ஸ்ரீகற்பகாம்பாள் உடனாய ஸ்ரீ கபாலீஸ்வரரை நன்கு திருப்தியாக தரிஸித்துக் கொண்டோம். கோயிலில் பல முன்னேற்றங்கள் காணப்பட்டன. அடுத்து, கிரி கடை. யஜுர் உபாகர்மா புஸ்தகம் (சம்ஸ்கிருதத்திலும், தமிழிலும்) வாங்கினேன். விரைவிலேயே கிரி கடை தன்னுடைய இன்னொரு கிளையை அண்ணாநகரில், ஐயப்பன் கோயிலுக்கு அருகில், திறக்க இருக்கிறார்கள். அம்பிகா கடைக்குச் சென்று அப்பளம் முதலான சில

Srimad Ramayanam - Sri Velukkudi Krishnan

ஸ்ரீராமாயணம். 100th Episode ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம் இவைகளுக்கு அடுத்து, தற்போது ஸ்ரீராமாயணம் சொல்லி வருகிறார். கீதை சொல்ல ஆரம்பித்தது 18 ஜனவரி 2007-ல். 735 நாட்கள் சொன்னபிறகு, 6 நவம்பர் 2009-ல் கீதை நிறைவு பெற்றது. பின்னர் ஸ்ரீமத் பாகவத புராணம் சொல்ல ஆரம்பித்தார். 621 நாட்கள் சொன்னார்; 2012 மார்ச் 30-ஆம் தேதி நிறைவு. முடித்த அடுத்த நாளே ( 31-03-2012 அன்று ) ஸ்ரீராமாயணம் சொல்ல ஆரம்பித்தார், ஞாயிற்றுக்கிழமை ஆனபோதிலும் அன்று ஸ்ரீராம நவமியானதால் ஆரம்பித்து விட்டார். பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6-30 லிருந்து 6-45 வரை சொல்லி வருகிறார். முதல் ஆறு ஏழு நிமிஷங்க்ளுக்கு ஏதாவ்து ஒரு ராமர்/ஆஞ்சநேயர் கோயிலை காண்பித்து, கோயிலைப் பற்றிய விவரங்களை விஸ்தாரமாக விளக்குகிறார்; பின்னர் வால்மீகி மற்றும் கம்ப ராமாயணங்களிலிருந்து ராமகாதையை சொல்லுகிறார். திங்கள் கிழமை ஆரம்பித்து ஒரு கோயிலை குறித்து தினமும் வெள்ளி வரை சொல்வார்; அடுத்த திங்கட்கிழமை வேறு ஒரு கோயிலுக்கு அழைத்துச் செல்வார். இன்று ( 17-08-2012 வெள்ளி ) ராமாயணத்தின் 100-வது பகுதி யை சொ