Skip to main content

Posts

Showing posts from July, 2011

Sri Vittal Rukmini Samasthan - கோவிந்தபுரம் - Pt 3

கோவிந்தபுரம் 03வது பகுதி. ஜூலை 27, புதன்கிழமை : காலை 5 மணிக்கு எழுந்து, குளித்து ஸ்ரீவிட்டல்-ருக்மிணி தாயாரின் சுப்ரபாத சேவையின் முன்பகுதியை இன்று தரிஸித்தோம். மஹாராஷ்டிர பாணியில் ஆடை உடுத்திக் கொண்டு ஸ்ரீ அண்ணா பூஜை செய்தார். அவர் அலங்காரம் பண்ணுவதை நாள் முழுக்க பார்த்துக்கொண்டே இருக்கலாம். பின்னர் அவர் உஞ்சவிருத்தி செய்தார். விஜயா, சாவித்திரி, மாமி மற்றும் அங்கிருந்த பெண்மணிகள் அவருக்கு அரிசி பிக்ஷை போட்டனர். கடைசியாக பாத சேவை நமஸ்காரம் பண்ணிக்கொண்டு, காரில் ஏறினோம். அப்போது மணி காலை 8-30. இந்தக் கோயிலில் ப்ரஸாதம் என ஒன்றுமே தருவதில்லை. கோயில் மிக அழகாக, புனிதமாக இருக்கிறது. பார்க்க வேண்டிய கோயில். மயிலாடுதுறையில் சிற்றுண்டி முடித்து, கடலூர் வரும்போது மணி 11-45. அங்கு பஸ் ஸ்டாண்டில் திருவண்ணாமலை செல்லும் பஸ்ஸில் சாவித்திரியை ஏற்றிவிட்டேன். சாவித்திரி அங்கிருந்து ஹோசூர் செல்வாள். (ஹோசூருக்கு அவள் மாலை 7-15க்குப் போய்ச் சேர்ந்தாள்.) புதுச்சேரி ஸர்குரு ஹோட்டலில் அருமையான மதிய சாப்பாடு. சென்னை வீட்டிற்கு மாலை 4-30 க்கு வந்து சேர்ந்தோம். இவ்வாறாக எங்கள் கோவிந்தபுரம் பயணம் மிக திர

Sri Vittal Rukmini Samasthan - கோவிந்தபுரம் - Pt 2

கோவிந்தபுரம் பகுதி 02 ஜூலை 26, செவ்வாய்க்கிழமை : விடியற்காலம் 4-45க்கு நான் எழுந்து, குளித்து, அருணாச்சலத்துடன் டாக்ஸியில் கும்பகோணம் ஸ்டேஷனுக்குக் கிளம்பினோம். கோவிந்தபுரத்திலிருந்து 12 கிமீ தூரத்தில் உள்ளது. சாவித்திரி 6 மணிக்கு வந்தாள். அறைக்கு வந்தபோது எல்லாரும் குளித்து ரெடியாக இருந்தனர். உடனடியாக் சாவித்திரியும் குளித்து, எல்லாரும் 6-45க்கு கோயிலுக்குப் புறப்பட்டோம். கோயில் complex-லியே ரூம் இருக்கிறது. இரண்டு நிமிஷ நடைதான். சுமார் 25-30 படிகள் ஏறவேண்டும். காலை 6-45க்கு சுப்ரபாத சேவை என சொல்லியிருந்தனர். ஆனால், கதவை 7-15 க்கு தான் திறந்தனர். பளிச்சென்று ஒளிவீசும் ஸ்ரீவிட்டல்-ருக்மிணியை தரிஸித்தோம். என்ன தெய்வீகமான அழகு ! ஸ்ரீ அண்ணா (விட்டல்தாஸ் மஹராஜ் இப்படித்தான் அழைக்கப் படுகிறார்) பூஜை செய்து கொண்டிருந்தார். கிருஷ்ணன் பாடல்களும், பஜனைகளும் பாடிக்கொண்டே பூஜை செய்தார். அலங்காரங்களும், பூஜையும் முடிந்த பின்னர் எங்களை ஸ்வாமி அருகில் வந்து அவரது பாதங்களில் நம் தலையை வைத்து நமஸ்காரம் பண்ண இந்தக் கோயிலில் அனுமதிக்கிறார்கள். வட இந்திய வழக்கம் இங்கும் கடைப்பிடிக்க படுகிறது.

Sri Vittal Rukmini Samasthan - கோவிந்தபுரம் - Pt I

SRI VITTAL RUKMINI SAMASTHAN - GOVINDAPURAM - Part 1 மஹாராஷ்டிர மாநிலம் பண்டர்பூர் என்னும் ஊரிலுள்ள ஸ்ரீவிட்டல் கோயிலைப் போன்று தமிழ்நாட்டிலும் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று ஆசை கொண்டு, ஸ்ரீவிட்டல்தாஸ் மஹராஜ் கும்பகோணத்தின் அருகிலுள்ள கோவிந்தபுரம் என்னும் கிராமத்தில் கோயிலை நிர்மாணிக்க ஆரம்பித்தார். சேங்காலிபுரம் ப்ருஹ்மஸ்ரீ அநந்தராம தீக்ஷிதரும், அவர் தம்பி ப்ருஹ்மஸ்ரீ நாராயண தீக்ஷிதரும் தமிழ்நாட்டின் இரண்டு புகழ்பெற்ற பக்திமான்கள். நாராயண தீக்ஷிதரின் பேரனான ஸ்ரீ ஜெயகிருஷ்ண தீக்ஷிதரும் இவர்களைப் போலவே சிறந்த பக்திமான். ஸ்ரீவிட்டல் பகவான் மேல் இவருக்கு இருந்த பக்தியால் இவர் ஸ்ரீவிட்டல்தாஸ் மஹராஜ் என அழைக்கப்படுகிறார். இந்தியா மற்றும் உலகின் பல ஊர்களிலும் இவரது விட்டல் பஜனை புகழ் பெற்றது. கோயில் கட்டுவதற்கான நிதி உதவியை இவர் பல ஊர்களில் நாம சங்கீர்த்தனம் செய்து திரட்டினார். கோயிலும் வளர ஆரம்பித்தது. இந்த 2011 வருஷம் ஜூலை 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பௌர்ணமி திதியில் கோயிலின் மஹாகும்பாபிஷேகம் பஜனைகள் பாடல்கள் மற்றும் வேத கோஷங்களும், விட்டல் நாமாக்களும் ஒலிக்க கோலாகலமாக நடந்தது.

Bhima Ratha Santhi

பீமரத சாந்தி (17-7-2011) ஒருவருக்கு 69 வயசு முடிந்து 70 தொடங்கும்போது பீமரத சாந்தி பண்ணுவது வழக்கம். நான் 1941-ல் பிறந்தவன்; எனவே 2011-ல் 69 முடிந்தது. என் பிள்ளைகள் மூவரும் பீமரத சாந்தி பண்ணிக் கொள்ளுமாறு வற்புறுத்தினார்கள்; புது வீட்டில் அதுவும் சொந்த வீட்டில் பண்ணிக் கொள்வது இன்னும் விசேஷமானது; எனவே மறுப்பு ஏதும் சொல்லாமல் ஒத்துக் கொண்டேன். என்னுடைய நக்ஷத்திரம் 2011, ஜூலை 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வந்தது. ஒருநாள் முன்பு அதாவது ஜூலை 16-ஆம் தேதி காலை 7 மணிக்கு இதைப்பற்றி என்னிடம் அர்விந்த் முதன்முதலாக சொன்னான். VERY VERY SUDDEN DECISION. எல்லா காரியங்களையும் அர்விந்த - கிருத்திகா இருவரும் ஃபோன் மூலமே முடித்தனர். அருண், அஷோக் ஆகியோருக்கு சொல்லி அவர்களும் வர சம்மதித்தனர். அஷோக் உடனே காரில் (பெங்களூரிலிருந்து) கிளம்பியே விட்டான் !! வரும் வழியில் ஹோசூரிலிருந்து சாவித்திரியையும் கூட்டி வந்தான். உறவினர் எல்லாரையும் ஃபோன் மூலமாகவே அழைத்தோம்; சாஸ்திரிகளுக்கும் அவ்வாறே! சாமான்களையும் உடனேயே வாங்கினோம். அஷோக் நீரஜா சாவித்திரி மூவரும்  பகல் 4-30க்கு வந்தனர். அர்விந்த சாஸ்திரிகள் சாமான்கள

ஸ்ரீமத் பாகவதம் 10-வது ஸ்கந்தம் - ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்

ஸ்ரீமத் பாகவதம் 10 வது ஸ்கந்தம் - பகுதி 1 வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பாகவதத்தின் 10-வது ஸ்கந்தத்தை 25-03-2011 அன்று ஆரம்பித்தார். இந்த ஸ்கந்தத்தில் கண்ணனின் பிறப்பும், வளர்ப்பும், முடிவும் விஸ்தாரமாக சொல்லப்பட்டுள்ளன. 10 வது ஸ்கந்தம் 90 அத்தியாயங்கள் கொண்டது, மிக முக்கியமானது,  மிக நீளமானது. இதை நான் மூன்று பகுதிகளாக பிரித்து, எழுதப் போகிறேன். மதுரா நகரில் தேவகிக்கும், வஸுதேவருக்கும் கண்ணன் எட்டாவது குழந்தையாகப் பிறந்தான். தேவகியின் அண்ணன் கம்ஸனுக்கு “எட்டாவது குழந்தை” மூலம் இறப்பு என சாபம் இருந்தபடியால், கம்ஸன் தேவகி-வஸுதேவரை சிறையில் அடைத்து, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை ஒவ்வொன்றாக கொன்று முடித்தான். ஏழாவது கர்ப்பத்தை வெளியில் இழுத்து, அதை கோகுலத்திற்கு  கொண்டு போய் அங்கு வசித்த [வஸுதேவரின் இன்னொரு மனைவியான] ரோஹிணி யின் கர்ப்பத்தில் பகவான் செலுத்தினார். இந்தக் குழந்தை பலராமன். [கர்ப்பத்தில் இருந்து வெளியே இழுத்து வரப்பட்டதால், பலராமனுக்கு ஸங்கர்ஷ்ணன் என்ற இன்னொரு பெயரும் உண்டு.] ரோஹிணிக்குப் பிறந்த பெண் குழந்தையை தேவகியோடு சிறையில் விட்டார். எட்டாவது குழந