Skip to main content

Posts

Showing posts from April, 2011

கவரப்பட்டு கிராமம் - ஸீதா கல்யாணம்

கவரப்பட்டு என்னும் கிராமம் சிதம்பரத்திலிருந்து சுமார் 6-7 கிமீ தூரத்தில் உள்ளது. இதுதான் எங்கள் “சொந்த ஊர்” எங்கள் அப்பாவின் இனிஷியலான G என்பது இந்த கிராமத்தைத்தான் குறிக்கிறது. இங்கு எங்கள் தாத்தா (ராமசேஷ ஐயர்) வசித்து வந்தார். (அவர் காலமானதும் இங்குதான்) அவருக்கு முன்பு அவரது தந்தை - எங்கள் கொள்ளுத்தாத்தா ஸ்ரீமான் நடராஜ ஐயரும் இந்த கிராமத்தில் தான் வசித்திருக்க வேண்டும். எங்கள் தாத்தா ஸ்ரீமான் ராமசேஷ ஐயர் எங்கள் தாத்தா ஒரு ராமர் உருவப்படத்திற்கு பூஜைகள் செய்து வந்தார். இந்தப் படத்தை அவர் பின்னால் ஊருக்கே அன்பளிப்பாக கொடுத்து விட்டார். ஸ்ரீ ராம நவமியின் போது இந்தப் படத்திற்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். முதலில் ஸ்ரீராமநவமி உத்ஸவம் வீடுகளில் நடைபெற்று வந்தது; பின்னர், கிராமத்து பக்தகோடிகள் பணம் திரட்டி ஒரு கட்டிடத்தை கட்டி அதில் ஸ்ரீராமரை வைத்து ராமநவமியை கொண்டாட ஆரம்பித்தனர். ராமர் மடம், கவரப்பட்டு 150 வருஷங்களாக இந்த ஸ்ரீராம நவமி உத்ஸவம் கவரப்பட்டு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு (2011) 151-வது உத்ஸவம். ஜனனோத்ஸவமாக ஸ்ரீராம நவமி திதி தொடங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடக்கிறத

Gruha Pravesam - 17 April 2011 (Arun)

சென்னை அடையாரிலிருந்து 25 கிமீ தூரத்தில் OMR எனப்படும் பழைய மஹாபலிபுரம் ரோடில் (now, Rajiv Gandhi Salai) உள்ள படூர்   என்னும் இடத்தில், அருண் ஒரு 2 BHK Flat க்கு முன்பதிவு செய்தான். இதற்கான பதிவு (Registration) 19-11-2009 அன்று திருப்போரூர் என்னும் ஊரில் (படூரிலிருந்து மஹாபலிபுரம் நோக்கி இன்னும் 10 கிமீ தூரம்) sub-registrar அலுவலகத்தில் நடந்தது ( விவரங்கள் இங்கே ) வீடு கட்டி முடித்தபின் வீட்டிற்கான சாவி ஏப்ரல் 2011-ல் அருணிடம் வழங்கப்பட்டது. ஏற்கனவே க்ருஹ ப்ரவேஸத்திற்கான முஹூர்த்தம் ஃபிப்ரவரி 16 என நிச்சயிக்கப்பட்டு இருந்தது; ஆனால், சாவி கிடைக்காததால், முஹூர்த்தம் ஏப்ரல் 17, 2011 (ஞாயிற்றுக்கிழமை) என மீண்டும் நிச்சயிக்கப்பட்டது. கிருஹப் ப்ரவேஸத்திற்கான வேலைகள் முழுமூச்சுடன் ஆரம்பிக்கப் பட்டன்; எல்லாரையும் ஃபோன் மூலமே அருண் - காயத்ரி அழைத்தனர். அருகிலுள்ள ஓரிருவரை மட்டும் நேரில் சென்று அழைத்தனர். சாஸ்திரிகள், உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதிய உடைகள் வாங்கப்பட்டன. எல்லா ஏற்பாடுகளும் முடிந்தன, முஹூர்த்தமும் வந்தது. ஏப்ரல் 16 (சனிக்கிழமை) புது வீட்டிற்கு காயத்ரி சென்று வீட்டைப் பெர

ஸ்ரீராமனின் கல்யாண குணங்கள் - வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள்

வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் சென்னை ஆழ்வார்பேட்டை ஆஸ்தீக ஸமாஜத்தில் இந்த 2011 மார்ச் 29-30-31 ஆகிய மூன்று தினங்கள் தினமும் மாலை 6-30க்கு உபன்யாஸங்கள் நிகழ்த்தினார். அவர் எடுத்துக் கொண்ட தலைப்பு :: “ ஸ்ரீராமனின் கல்யாண குணங்கள்” வால்மீகி முனிவர் ஆஸ்ரமத்திற்கு நாரதர் வந்தார்; அவரிடம் ஒரு பதினாறு கல்யாண குணங்களைப் பட்டியலிட்டு, இந்த 16 குணங்களும் ஒருவனிடத்தில் ஒரே சமயத்தில் இருக்குமா, அப்படியென்றால் யார் அந்த மனிதன் என்று சொல்ல முடியுமா என வால்மீகி கேட்டார். ஒரே வார்த்தையில் “ஸ்ரீ ராமன்” என நாரதர் பதிலளித்தார். இந்த 16 குணங்களையும் வேளுக்குடி தனக்கே உரித்தான தெளிய தமிழில் சலசலத்து ஓடும்  காவிரியாக, பொங்கிப் பெருகும் கங்கையாக - வால்மீகியையும், கம்பரையும், ஆழ்வார்களையும் நம் கண் முன்னே நிறுத்தி விளக்கிச் சொன்னார். மிக அருமையாக இருந்தது. உபன்யாஸம் பண்ணிய 2 1/2 மணி நேரம் போனதே தெரியவில்லை. ராஜப்பா 01-04-2011 காலை 1000 மணி