Skip to main content

Posts

Showing posts from March, 2011

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பல ஊர்களிலும் சென்று ஆன்மீக சொற்பொழிவுகள், உபன்யாஸங்கள் செய்து வருகிறார். இதன் அங்கமாக நேற்று அவர் ஹோசூர் சென்று உபன்யாஸம் செய்து வருகிறார். நேற்று, இன்று, நாளை (25,26,27 ஆகிய மூன்று தேதிகளில் மாலை 6 மணிக்கு) உபன்யாஸம் செய்யும் இடம் சாவித்திரி வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில் உள்ளது. சாவித்திரி நேற்று மாலை போயிருந்தாள்; இன்றும் போயிருப்பாள். சாவித்திரியும் ஹோசூரில் அவளது குழுவினரும் சேர்ந்து பஜனைகள், விசேஷ பூஜைகள், சஹஸ்ரநாமம் சொல்லுதல் இன்ன பிற ஆன்மீக விஷயங்களில் / தொண்டுகளில் ஈடுபடுவது எல்லாருக்கும் தெரியும். இவற்றை நடத்துவதற்காக சாவித்திரி வீட்டின் பக்கத்தில் ஒரு மாமி (புவனா மாமி) தன் வீட்டின் ஒரு பகுதியை கொடுத்துள்ளார். வருஷம் முழுதும் இங்கு பலவித பக்தி, ஆன்மீக சம்பந்தமான விழாக்கள் நடைபெறும். நானும் விஜயாவும் கூட சில பூஜைகளுக்கு சென்றுள்ளோம். BLOGம் எழுதியுள்ளேன். இந்த இடத்திற்கு “தபோவனம்” என பெயரிட்டுள்ளார்கள். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமி ஹோசூர் வருகிறார் என்பது தெரிந்ததும், அவரை தபோவனத்திற்கு அழைத்து

ஸ்ரீமத் பாகவதம் 10-வது ஸ்கந்தம் - ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்

பாகவதம் 10-வது ஸ்கந்தம் பாகவதத்தில் 9-வது ஸ்கந்தத்தின் “முன்னுரை”யை இங்கு படிக்கலாம். 9-வது ஸ்கந்தம் ஃபிப்ரவரி 9-ஆம் தேதியன்று துவங்கியது. இன்று (25-03-2011) காலை நிறைவு பெற்றது. வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் இன்று காலையே 10-வது ஸ்கந்தத்தை ஆரம்பித்தார். ஸ்ரீமத் பாகவதம் 9-வது ஸ்கந்தத்தில் ஸூர்ய வம்ஸமும், சந்திர வம்ஸமும் விளக்கிச் சொல்லப்பட்டன. அத்ரியின் வம்ஸத்தில் சந்திரன் => புதன் => புரூரவஸ் => ஸத்யவதி => விஸ்வாமித்திரர் => ஜமதக்னி => பரசுராமர் என நீள்கிறது. விஸ்வாமித்திரருக்கு யயாதி என்ற பேரன் பிறந்தார். யயாதிக்கு யது, புரு, அநு என 3 பிள்ளைகள். புருவின் வம்ஸத்தில் திருதராஷ்டிரன், பாண்டு பிறந்தனர்; இவர்களுக்கு கௌரவர்களும், பாண்டவர்களும் பிறந்தனர். இவர்கள் வம்ஸம் மஹாபாரதத்தில் விரிவாக சொல்லப்படுகிறது. அநுவின் வம்ஸத்தில் அதிரதர் பிறந்தார்; இவர்தான் பின்னால் கர்ணனை வளர்த்த தேரோட்டி. யயாதியின் இன்னொரு மகனான யதுவிற்கு குகுரர், யஜமானர் என 2 பிள்ளைகள். குகுரருக்கு தேவகர், உக்ரஸேனர் பிள்ளைகள். தேவகருக்கு தேவகி என்ற பெண்; உக்ரஸேனருக்கு கம்ஸன் என்ற மகன். (த

Mylapore Ther 16March2011

இது ஒரு Digital புகைப்பட blo g . மயிலாப்பூர் ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் தற்போது பங்குனி ப்ரம்மோத்ஸவம் நடைபெற்று வருகிறது. இன்று புதன்கிழமை 16 மார்ச் 2011 தேர் உத்ஸவம் . காலை 9-45க்கு நானும் விஜயாவும் மயிலாப்பூர் சென்றோம். அங்கு கண்ட சில காட்சிகளை காமிராவில் பதிந்து கொண்டேன். நீங்களும் பாருங்கள்: RK Math ரோடில் கடை விரிக்கிறார்கள் பக்கத்திலேயே மோர் தருகிறார்கள் (Ramakrishna Math at the back) ராமகிருஷ்ண மடத்திற்கு அருகில் மோர் உபசரிப்பு இது தெற்கு மாட வீதி -  மாவடு சீஸன் தெற்கு மாட வீதியில் விஜயா தாக சாந்தி கோயிலின் அருகில் ... காவல் அறிவிப்பு கோயில் சன்னதி தெருவில் கிரி ட்ரேடர்ஸ் ஸ்வாமி தேர் நிலைக்கே வந்து விட்டது. இன்று 7 மணிக்கே புறப்பாடு ஆகியது. இது கீழ வீதியில். ஸ்வாமி தேரின் இன்னொரு காக்ஷி அம்பாள் மற்றும் முருகன் தேர்கள். கிழக்கு வீதியில். ஸ்வாமி தேரின் பின்புற காக்ஷி கீழ வீதியில் அம்பாள் தேர் முருகன் தேர் கீழ வீதி கீழ வீதியில் கற்பகாம்பாள் மெஸ் எதிரில் தயிர் சாதம் உபசரிப்பு மீண்டும் தெற்கு மாட வீதி மாவடு கொட்டி குவித்தி

Gruha Pravesam - 06 March 2011 (Arvind)

அர்விந்த் - கிருத்திகாவின் புது வீட்டிற்கான கிருஹப் ப்ரவேஸம் நேற்று, 6 மார்ச் 2011 (ஞாயிற்றுக்கிழமை) வெகு விமரிசையாக நடந்தேறியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு இதற்கான முஹூர்த்தம் குறிக்கப்பட்ட பிறகு அர்விந்தும் கிருத்திகாவும் சுறுசுறுப்பாக பணிகளை ஆரம்பித்தனர். பத்திரிகை அச்சடிப்பது முதல், சாஸ்திரிகள் ஏற்பாடு, உணவு ஏற்பாடு, புத்தாடைகள் வாங்குவது, விருந்தினர்கள் அழைப்பு போன்ற வழக்கமான வேலைகளை முடித்து 6-ஆம் தேதிக்கு தயாராகினர். 4-ஆம் தேதி வெள்ளி காலை அஷோக்கும், நீரஜாவும் பங்களூரிலிருந்து வந்தனர். 5-ஆம் தேதி ஸ்ரீகாந்த் தில்லியிலிருந்து வந்தான். சதீஷும், ஸ்ருதியும் வந்தனர். 4-ஆம் தேதி இரவு முதலே வெளியிலிருந்துதான் சாப்பாடு. 5-ஆம் தேதி மாலை நீரஜாவும், கிருத்திகாவும் புது வீட்டிற்கு போய் கோலம் போட்டனர். அர்விந்த், கிருத்திகா, மற்றும் விஜயா விழாவிற்கு தேவைப்படும் எல்லா சாமான்களையும் எடுத்து வைத்தனர். 6-ஆம் தேதி - முஹூர்த்த நாள். காலை 4 மணிக்கே எழுந்து குளித்து, 5-30 மணிக்கு புது வீட்டிற்குப் புறப்பட்டோம். அருண் காயத்ரி, குழந்தைகள் 6-15க்கு அங்கு வந்தனர். கிருத்திகாவின் பெற்றோரும் 6-15