Skip to main content

Posts

Showing posts from February, 2011

ஸ்ரீமத் பாகவதம் - 339

ஸ்ரீமத் பாகவதம் உபன்யாஸத்தின் 339-வது பகுதி இன்று (28 ஃபிப்ரவரி 2011) நடந்தது. இன்று ஸ்ரீராமர் ஜனனம் சொல்லப்பட்டது. இக்ஷ்வாகு வம்ஸத்தில் பகீரதனுக்குப் பின்னர் வந்த அஜர் என்பவருக்கு தசரதன் பிறந்தார். ரிஷ்யசிருங்கர் மூலமாக தசரதன் செய்த புத்திரகாமேஷ்டி யாகத்தில் பாயஸக் குடம் வந்தது. அந்த பாயஸத்தை தசரதன் இரண்டாகப் பிரித்து  ஒரு 1/2 பாகத்தை கௌஸல்யாவிற்கு கொடுத்தார்; மீதமிருந்த 1/2 பாகத்தை மீண்டும் இரண்டாக பிரித்து (அதாவது மொத்தத்தில் 1/4 பாகத்தை) கைகேயிக்கும், மீதமிருந்த 1/4 பாகத்தை இரண்டாக பிரித்து (1/8 பாகம்)  இரண்டையும் ஸுமித்ரைக்கும் கொடுத்தார். கௌஸல்யாவிற்கு ஸ்ரீராமரும், கைகேயிக்கு பரதனும், ஸுமித்ரைக்கு லக்ஷ்மணன், சத்ருக்னன் ஆகியோரும் பிறந்தனர். குழந்தைகளுக்குப் பெயர் வைக்க வந்த வஸிஷ்டர் இரண்டு குழந்தைகள் (லக்ஷ்மணன், சத்ருக்னன்) அழுவதைக் கண்டார்.  ராமன் பக்கத்தில் தான் இல்லையென்று லக்ஷ்மணனும், பரதன் பக்கத்தில் தான் இல்லையென்று சத்ருக்னனும் அழுதனராம். ராமன் இருந்த அதே தொட்டிலில் லக்ஷ்மணனையும், பரதன் இருந்த தொட்டிலில் சத்ருக்னனையும் விட்டபிறகுதான் அழுகை ஓய்ந்ததாம். அன்று முதலே ராமன

ஸ்ரீ ஸத்யநாராயண வ்ரத பூஜை - 18.02.2011

நீரஜாவும் அஷோக்கும் சில வருஷங்களாக ஸ்ரீஸத்ய நாராயண வ்ரத பூஜை அனுஷ்டித்து வருகிறார்கள். இந்த வ்ரதத்தை பற்றியும் அவர்கள் 29 மார்ச் 2010 அன்று பூஜை செய்த விவரத்தையும் இங்கு படிக்கலாம் . இந்த (2011) வருஷம் அவர்கள் 18 ஃபிப்ரவரி 2011 (வெள்ளிக்கிழமை) அன்று இந்த பூஜையை செய்தனர். விஜயாவும் நானும் சென்னையிலிருந்து 17-ஆம் தேதி பிற்பகல் பெங்களூர் சென்றோம். பூஜைக்கான ஏற்பாடுகளை (சாமான்கள் வாங்குதல் போன்றவை) நீரஜாவும், அஷோக்கும் ஏற்கனவே செய்து முடித்திருந்தனர். 18-ஆம் தேதி மாலை 4 மணிக்கு வீட்டை மெழுகி, துடைத்து, ஸ்வாமி படத்தை எடுத்து வைத்து, அலங்கரித்து பூஜைக்குத் தயாராகினோம். நீரஜா எலுமிச்சம்பழ சாதம், ரசஞ்சாதம், தயிர் சாதம், உ.கிழங்கு கறி செய்தாள். மாமி, மாமா, ஸ்ரீவள்ளி ஆகியோர் 4-45க்கு வந்தனர். நைவேத்யத்திற்கு மாமி ரவாகேஸரி பண்ணி எடுத்து வந்தார். சாஸ்திரிகள் 5-45க்கு பூஜையை ஆரம்பித்தார்.சென்னை மயிலாப்பூரிலிருந்து நாங்கள் வாங்கிச் சென்ற புடவையை நீரஜா அணிந்து கொண்டாள். மிகவும் விரிவான பூஜை. ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர 1008 நாமாவளியுடன் பூஜை 8-15க்கு நிறைவுற்றது. மாமியும், விஜயாவும் 1008 நாமாவளிய

Karthik-Vasanth Upanayanam

2011 ஃபிப்ரவரி 13, ஞாயிறு காலை 0700 மணிக்கு சாவித்திரியின் பேரன்களும், பாலகிருஷ்ணனின் (ரமேஷ்) புத்திரர்களுமான கார்த்திக் (13), மற்றும் கோகுலகிருஷ்ணன் (வஸந்த்) (7) இருவருக்கும் உபநயனம் வெகு சிறப்பாக நடந்தேறியது. அண்ணாநகர் 8வது மெயின் ரோடில் ஒரு மண்டபத்தில் விழா நடந்தது. உற்றார், உறவினர், நண்பர்கள் என நிறைய பேர் வந்திருந்து சிறுவர்களை ஆசீர்வதித்தனர். இனி தொடக்கத்திலிருந்து ... 2010-ல் ஆகஸ்ட் 19ஆம் தேதி சாவித்திரி எனக்கு ஃபோன் பண்ணி முஹூர்த்தம் குறித்துத் தருமாறு கேட்டாள்; நானும் பல நாட்கள் வேலை செய்து, 6 முஹூர்த்த நாட்களை தேர்வு செய்து அவளுக்கு செப்டம்பர் 10ஆம் தேதி தெரிவித்தேன். இந்த 6 நாட்களிலிருந்து அவள் 13 ஃபிப்ரவரி 2011 ஞாயிறு என்ற முஹூர்த்தத்தை முடிவு செய்தாள். ஆக, 5 மாதங்களுக்கு முன்பாக உபநயன வேலைகள் தொடங்கின. முதலில் ரமேஷ் அண்ணாநகரில் ஒரு மண்டபத்தை முடிவு செய்தான். அடுத்து, பெசண்ட்நகரில் ஸ்ரீநிவாஸன் என்ற கேடரரை முடிவு செய்து நவம்பர் 15-ஆம் தேதி அவருக்கு முன்பணம் கொடுத்தேன். சாவித்திரியும் ரமேஷும் தங்கள் வேலைகளை (பத்திரிகை அடித்தல், PURCHASES etc) துவங்கினார்கள். ஃபிப்ரவ

ஸ்ரீமத் பாகவதம் - 9-வது ஸ்கந்தம் - வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்

**   வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் நேற்று (08-02-2011) பாகவதத்தின் 8-வது ஸ்கந்தத்தை நிறைவு செய்தார். (29-12-2010 அன்று இந்த ஸ்கந்தத்தை ஆரம்பித்தார்.) 8-வது ஸ்கந்தத்தில் முக்கியமாக கஜேந்திர மோக்ஷமும், வாமன அவதாரமும், ஓங்கி உலகளந்த திரிவிக்ரமன் அவதாரமும் சொல்லப்படுகின்றன. இன்று, புதன்கிழமை 09-02-2011; காலையில் 9-வது ஸ்கந்தம் சொல்ல ஆரம்பித்துள்ளார்.  இந்த ஸ்கந்தத்தில் முதலில் ஸூர்ய வம்ஸம் சொல்லப்படுகிறது. அதிதி தேவிக்கும் - காச்யபருக்கும் பிறந்தவர் விவஸ்வான் (ஸூர்யன்) இவரது புத்திரர் சிராத்ததேவர். இவரை வைவஸ்வதன் என்று அழைப்பார்கள் (வைவஸ்வத மநு) இவருடைய புத்திரர்  இக்ஷ்வாகு. ஞானகர்மஸந்யாஸ யோகத்தை அர்ஜுனனுக்கு விளக்கவந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இக்ஷ்வாகுவின் வம்ஸத்தை சொல்லுகிறார் :: (கீதை 4வது அத்தியாயம் முதல் 3 ஸ்லோகங்கள்) இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவான் அஹம் அவ்யயம் | விவஸ்வான் மனவே ப்ராஹ மனுர் இக்ஷ்வாகவே அப்ரவீத் || (அழிவற்ற இந்த யோகத்தை நான் விவஸ்வானுக்கு பகர்ந்தேன். விவஸ்வான் மனுவிற்கு மொழிந்தான். மனு இக்ஷ்வாகுவிற்கு உரைத்தான்) (இவ்வாறு பரம்பரையாக வந்துள்ள இந்த யோகம

ஸூர்ய தர்சனம் 06-02-2011

ஸூர்ய தர்சனத்தைப் பற்றி மஹாகவி ஏதேனும் எழுதியுள்ளாரா என சற்றுமுன் தேடினேன்; எழுதாமல் இருப்பாரா? இதோ அவரது  எழுத்தில்: “பரிதியே பொருள் யாவிற்கு முதலே, - பானுவே, பொன்செய் பேரொளித் திரளே, ” “கடலின் மீது கதிர்களை வீசிக் கடுகி வான்மிசை ஏறுதியையா படரும் வானொளி யின்பத்தைக் கண்டு பாட்டுப் பாடி மகிழ்வன புட்கள் ..” இன்று (06-02-2011, ஞாயிறு) காலை 6-40க்கு வங்கக் கடலிலிருந்து எழும்பிய ஸூரியனின் பொன்னிற தகத் தகவென்று ஒளிவீசும் அந்த அற்புதக் காட்சியை கண்டு மனம் பறி கொடுத்தேன். தினம் தினம் பார்த்தாலும் சலிக்காத, மனசுக்கு நிம்மதி தரும் இயற்கையின் பேரழகு அது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா! ஏதோ நான் மட்டும்தான் ஸுரிய தர்சனத்தை கண்டு மகிழ்கிறேன் என்று எண்ணியிருந்தேன் - இன்று காலை சுமார் 10 பேரை பார்த்தேன் - எல்லாரும் ஸூரியனின் பொன்செய் பேரொளித் திரளில் மனம் மயங்கி ஸூரியனையே பார்த்துக் கொண்டு இருந்தனர். இன்னும் 10 பேர் ஸூரியனைக் குறித்து ஸ்லோகங்கள் (ஆதித்ய ஹ்ருதயம்?) சொல்லிக் கொண்டிருந்தனர். நேற்று காலை முன்பின் தெரியாத ஒருவர் காரிலிருந்து இறங்கி ஓடிவந்து எங்கள் பக்கத்தில் நின்று “ஓ, What