Skip to main content

Posts

Showing posts from January, 2011

Forty Years since Jan 1971

31 ஜனவரி 1971 அன்று காஞ்சிபுரத்தில் எங்கள் கல்யாணம் காஞ்சிபுரத்தில் நடந்தது. இன்று 40-வது ஆண்டு விழா கொண்டாடுகிறோம். 1971-ல் கல்யாணத்தின் போது நம் அம்மா-அப்பா, அண்ணா-மன்னி, KVS அத்திம்பேர் இருந்தனர். இவர்களையும் சேர்த்து அன்றைக்கு நம் குடும்பத்தில் 32 பேர்தான். எல்லாரும் கல்யாணத்திற்கு வந்திருந்தனர். கடலூரிலிருந்து விடியலில் கிளம்பி, செங்கல்பட்டில் இறங்கி, ப்ளாட்ஃபாரத்திலியே உட்கார்ந்து இட்லி சாப்பிட்டு, பின்னர் வேறு ட்ரெயின் மாறி காஞ்சிபுரம் அடைந்து, குதிரை வண்டிகளில் மண்டபம் சென்றது நினைவிருக்கலாம். கல்யாணதிற்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பன்று ஸ்ரீகாந்த் “தொலைந்து” போய் திரும்பி வந்ததும் நினைவிருக்கும். திரும்பியவுடன், பத்மா அக்கா வீட்டில் தடபுடலாக விருந்து ஒன்று நடந்தது. 1971-ல் நான் பூனாவில் வேலை பார்த்து வந்தேன்; மே - ஜூனில் விஜயா பூனா வந்தாள். அம்மாவும்,அப்பாவும் வந்தனர். 1972 ஜூலையில் அருண் (பம்பாய், சாண்டாக்ரூஸில்) பிறந்தான். அடுத்து அஷோக் 4 மார்ச் 1975 அன்று சென்னை மயிலாப்பூரிலும், 1 அக்டோபர் 1977 அன்று அர்விந்த ஹைதராபாத் காஞ்சன்பாக்கிலும் பிறந்தனர். 1962-ல் பூனா ச

Vishnu - Jayakrishna Upanayanam

Upanayanam of Vishnu (s/o Suresh - Vaishali) and Jayakrishna (Sudhakar - Revathi) was performed at Thane, Mumbai on 24 Jan 2011. Udaga Santhi and Naandhi functions were performed the previous day (23 Jan 2011). Though we two, Saroja-Athimber, Savithri, Rama had booked in advance our train tickets to go to Thane, none of us could go for various reasons. Sundaresan - Manni and others were upset but it was unavoidable. Only Sugavanam, and Subha - Magesh with children (from Pune) attended the function. God bless Vishnu, Jayakrishna and others. Rajappa 10:15 AM 26-01-2011

இலந்தம் பழம்

Inspired from an article (INDIAN JUJUBE) in today's (25th Jan)  New Indian Express newspaper. இலந்தம்பழம். “எலந்த பயம், எலந்த பயம் ..” என்ற பழைய தமிழ் சினிமாப் பாட்டு நினைவுக்கு வரட்டும். மிக எளிமையான, அதே சமயம் மிக ருசியான ஒரு பழம். ஸ்ரீராமனுக்கு சபரி கொடுத்த பழம். சிறுவயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடித்த பழம். ஸ்டாராபெர்ரி, கிவி போன்ற வெளிநாட்டுப் பழங்கள் முதல் தட்டிலும், ஆப்பிள், ஆரஞ்சு, திராக்ஷை, அன்னாசி போன்ற பழங்கள் இதற்கு அடுத்த தட்டிலும் உள்ள பழங்களாக இருக்கலாம்; ஆனாலும், இலந்தம் பழத்திற்கு என்னைப் போன்று தனி ரசிகர்கள் உண்டு. BHER என்று ஹிந்தியிலும் REGI என்று தெலுங்கிலும் அழைக்கப்படும் இது, பெரிய சைஸிலும் கிடைக்கிறது. பெரிய சைஸ் பழம் அவ்வளவு ருசியாக இருக்காது. இலந்தம் பழத்தை சாப்பிடும் முன், பழத்தினுள் சிறு worms இருக்கிறதா என பார்த்து, worms இல்லாத பழங்களை சாப்பிடவேண்டும். அந்த இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை பிரமாதமாக இருக்கும். சிலர் மிளகாய்த் தூள், உப்பு பிசறி இலந்தம்ப்ழத்தை சாப்பிடுவார்கள். பழத்தை இளம்சூடு வெந்நீரில் நன்றாக அலம்பி சாப்பிடுவது நல்லது. நான் வேல

சூரிய உதயம்

சூரியோதயம். பெஸண்ட்நகர் வந்ததிலிருந்தே ஒரு வருஷத்திற்கும் மேலாக கிட்டத்தட்ட தினம்தோறும் காலையில் தவறாமல் பீச்சில் walk போவது எனது வழக்கமானது. பாகவதம் கேட்டுவிட்டு 6-45க்குப் பிறகுதான் கடலோரம் செல்வேன். எனவே சூரியோதயத்தைப் பார்க்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறவில்லை. இந்த மாசமாவது சூரிய உதயத்தை பார்த்து விட உறுதி கொண்டேன். சனிக்கிழமை, ஜனவரி 22ஆம் தேதி காலை 6-15க்கே விஜயாவும் நானும் வீட்டை விட்டு கிளம்பினோம். 6-36க்குத்தான் உதயம் என பேப்பரில் படித்ததால், 6-30 வரை பீச்சில் நடந்தோம். இந்த வருஷம் சென்னையில் “குளிர்” கொஞ்சம் அதிகமாகவே இருந்ததால். காலை 6-15 மணிக்கு குளுகுளுவென்று நன்றாக இருந்தது. 6-30க்கு ஒரு இடத்தில் உட்கார்ந்து உதயத்திற்காக காத்திருந்தோம். 6-34க்கு அடிவானத்தில் சிகப்பு வண்ணம் தோன்ற ஆரம்பித்தது. அன்று மேகங்கள் இருந்ததால், சூரியனின் முதற் கிரணங்கள் 6-40க்குத்தான் புலப்பட்டன. 6-45க்கு தக தகவென சிகப்பு நிற சூரியன் கடலிலிருந்து கிளம்பியது - பரவசமான ஒரு காக்ஷி. வானமே ஒளிமயமானது. என்னுடைய ஃபோன் காமி்ராவிலிருந்து .. 6-50 வரை சூரிய உதயத்தை ரசித்துவிட்டு, உள்ளத்திலே மகிழ்ச

மயிலாப்பூர் கோயில்கள்

சுமார் 2 வருஷங்கள் ஆகியிருக்கும் என எண்ணுகிறேன் - மயிலாப்பூர் ஸ்ரீ ஆதி கேஸவனை தரிஸித்து. இன்று (18-01-2011) போனோம். மாலை 4-30க்கு கிளம்பி, கோயிலுக்குப் போனோம். முதலில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயரை தரிசித்துக் கொண்டோம். பின்னர், ஸ்ரீ வேதாந்த தேஸிகர் கோயிலுக்குச் சென்றோம். பளிச்சென்று விளக்குகள் போட்டு, பெயிண்ட் அடித்து கோயிலே ஜொலித்தது. ஹயக்கிரீவர், ஸ்ரீநிவாஸப் பெருமாள், அலமேலு மங்கா தாயார் , கருடாழ்வார், ஆண்டாள் ஆகியோரை தரிசித்துக் கொண்டு, அருகிலுள்ள ஸ்ரீ ஆதிகேஸவப் பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். மிகப் பழமையான கோயில். மரகதவல்லி தாயார்.பேயாழ்வாரின் புனித ஸ்தலம். கேஸவப் பெருமானின் கோயில் குளத்தில் அவதரித்தார் என்பது வரலாறு. எல்லா சன்னதிகளிலும் தரிசித்துக் கொண்டோம். என்னுடைய நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியது. அடுத்து, ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். கூட்டம் அதிகமில்லை. நல்ல தரிசனம் கிடைத்தது. சில கடைகளுக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பியபோது மணி 7-15. ராஜப்பா மாலை 8:20 மணி 18-01-2011

தங்கத்தேர் இழுத்தோம் - 2011

இன்று (14-01-2011) வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயிலில் நாங்கள் தங்கத்தேர் இழுத்தோம். இது அருண்-காயத்ரியின் வேண்டுதல். 6-45க்கு நான், விஜயா, கிருத்திகா, அதிதி, சதீஷ் ஆகியோர் காரில் கோயிலுக்கு. கிளம்பினோம். மருந்தீஸ்வரர் - திரிபுரசுந்தரி அம்மன் கோயில் பழமையான கோயில். அங்கு, அருண், காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம் ஆகியோரும், பாலு மாமா, மாமி, ரமணா, அர்ச்சனா, அவர்கள் குழந்தை, மீனாவின் குழந்தை, அவள் மாமனார், மாமியார் (மீனா வரவில்லை), காயத்ரியின் இரண்டு சித்தப்பாக்கள், கணேஷ், சுகவனம், சுதா, சந்தர், தனுஷ், தர்ஷிணி, சந்தரின் அம்மா, சரோஜா, ராஜி மாமி, கிரிஜா மாமி (இவர்கள் இருவரும் சரோஜாவின் அபார்ட்மெண்டில் வசிப்பவர்கள்) ஆகியோர் வந்தனர். 7-30 மணிக்கு தேர் ஆயத்தமானது. சுக்கிரவார அம்மனை தேரில் ஏற்றி கற்பூர தீபாராதனைக்கு பின் தேர் இழுத்தல் துவங்கியது. மொத்தம் 4 உபயதாரர்கள். ஒவ்வொருவரும் 1/4 சுற்று இழுக்கவேண்டும்; அருண் இரண்டாவதாக இழுத்தான்; நாங்களும் சேர்ந்து கொண்டோம். இழுத்து முடிந்து, அர்ச்சனை, தீபாராதனைக்கு பின்னர் கேஸரி பிரஸாதம் வழங்கப்பட்டது. அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்ட பின்னர் எல்லா

மார்கழி - 2010_11

இந்த வருஷம் (2010-11) மார்கழி மாதம் டிசம்பர் 16-ஆம் தேதியன்று துவங்கியது. அன்று தொடக்கம் நானும் விஜயாவும் தினம் தினம் விடியற்காலையில் எழுந்து, குளித்து கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனையும், விநாயகரையும், மற்ற தெய்வங்களையும் நமஸ்கரித்து வருகிறோம். மார்கழி மொத்தம் 30 நாட்களில், 4 நாட்கள்தான் கோயிலுக்கு. போக இயலவில்லை. பெரும்பாலான நாட்களில் சுடச்சுட வெண்பொங்கல் / சக்கரைப் பொங்கல் பிரஸாதம் கிடைக்கப் பெற்றோம்.   இந்த வருஷம் சென்னையில் குளிர் (வழக்கத்தைவிட) கொஞ்சம் அதிகம். அந்தக் “குளிரில்” நடந்து செல்வதே மிகப் பெரிய இனிய அனுபவமாக இருந்தது. இன்றோடு (ஜன 14) மார்கழி நிறைவு பெறுகிறது. இரவு 8-30 மணி சுமாருக்கு தை பிறக்கிறது. இனி கோயில்கள் வெறிச்சோடி இருக்கும், ஸ்வாமிக்கு அபிஷேகம் முதலானவை தாமதமாகத்தான் நடக்கும். எல்லாருக்கும் மனங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள். கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காமல்   விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம் உருக இந்த மார்கழியில் எங்களை ஆசீர்வதித்தது போலவே,  மீண்டும் அடுத்த வருஷமும் அதற்குப் பின்பும், இதே போன்று ம

SRINIVASA KALYANAM - Vishakha Hari

ஸ்ரீநிவாஸ கல்யாணம் - விஷாகா ஹரி உபன்யாஸம் DVD நேற்று, ஜனவரி 3-ஆம் தேதி, இந்த டீவிடீ_யை மயிலாப்பூர் கிரி டிரேடர்ஸில் வாங்கினேன் (ரூ 99/-) இந்த டீவிடீ மூன்று நாட்கள் முன்புதான் டிசம்பர் 31-ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. ஸ்ரீமதி விஷாகாவின் இன்னொரு அருமையான உபன்யாஸம். B Ananthakrishnan on Violin, Arjun Ganesh on Mridangam, Trichy Murali on Ghatam. வைஷ்ணவர்களின் 108 திவ்ய தேசங்களில், முக்கியமானவை மூன்று - ஸ்ரீரங்கம் (வைஷ்ணவம் வளர்ந்த ஊர்), காஞ்சிபுரம் (பிறந்த ஊர்), திருமலா (வைஷ்ணவத்தின் புகலிடம்). இவற்றில் திருமலாவில் குடி கொண்டுள்ள ஸ்ரீநிவாஸனைப் பற்றியது இந்த உபன்யாஸம். “பரம யோகிகளுக்கு மட்டுமே வைகுண்டத்தில் நீ தரிஸனம் கொடுத்து அருள் பாலிக்க வேண்டுமா? எளியவர்களுக்கும் நீ தரிஸனம் கொடுக்க வேண்டாமா?” என பகவானை நாரதர் வேண்ட, “ஸரி, நீயே ஒரு இடத்தை காண்பி,” என பகவான் சொன்னார். “தொண்டை மண்டலத்தில் ஒ ரு இடம் உள்ளது; அது இருட்டாக மிகவும் க்ஷீணித்து, நலிந்து போயிருக்கும் ஒரு இடம், அங்கு நீங்கள் எழுந்தருள வேண்டும்,” என நாரதர் சொன்னார். அதுதான் திருவேங்கடம் என்றும் திருமலா என்றும் அழைக்