Skip to main content

Posts

Showing posts from May, 2010

மெரீனா பீச்

மெரீனா பீச் போக மே மாதம் 8ஆம் தேதியன்று நான் எடுத்துக் கொண்ட முதல் முயற்சி பிசுபிசுத்துப் போனது. இங்கு படிக்கவும்  அடுத்த முயற்சியாக நேற்று (25 மே) மாலை மீண்டும் பஸ் நிறுத்தத்தில் 1/2 மணி நேரம் நின்றோம். நொந்து போய், வீடு திரும்ப பத்து அடிகள் எடுத்து வைத்தபோது 21-D வந்தது, அதுவும் காலியாக. அரைமணி நேரத்தில் நாங்கள் ராணி மேரிக் கல்லூரி வாசலில் இருந்தோம். காமராஜர் சாலையை (Beach Road) குறுக்காக கடந்து பீச் பக்கம் போய் நடக்க ஆரம்பித்தோம். மிகவும் அழகிய, சுத்தமான நடைபாதை பளபளத்தது. இரண்டு கிமீ நடந்த பின்னர் கொஞ்சம் உட்கார்ந்தோம். கண்ணகி சிலை நிறுத்தத்தில் பஸ் பிடித்து வீடு திரும்பினோம். மெரீனா பீச் நிஜமாலுமே மிக அழகாக புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. துணை முதல்வர் திரு ஸ்டாலினுக்கு நன்றிகள். LightHouse-லிருந்து சிவானந்தா சாலை வரை (அல்லது அதையும் தாண்டி) பளபளக்கும் நடைபாதை உள்ளது. உட்கார, குழந்தைகள் ஓடியாடி விளையாட நிறைய இடங்கள் இருக்கின்றன. நீணட நெடிய புல்தரைகள் பச்சைக் கம்பளமாக விரிந்திருக்கின்றன. நீங்களும் போய்ப் பாருங்கள்.   ராஜப்பா 10 மணி 26-05-2010

இயற்கையின் இன்னொரு பக்கம்.

இயற்கையின் கொள்ளை அழகை (விரிந்து பரந்த வங்கக்கடலை வர்ணித்து) போனமுறை எழுதியிருந்தேன் . இன்று (19-5-2010) இயற்கையின் இன்னொரு அழகிய பக்கத்தைப் பற்றி ...   நேற்று முதல் கடலில் காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதாகவும், அதனால் சென்னையில் பலத்த மழையும், காற்றும் இருக்குமென சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இரவு முழுதும் பெரிய தூற்றல்களாக மழை பெய்து கொண்டேயிருந்தது. காலையில் “ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து” ஊரே இருட்டாக இருந்தது. மழையும் இருந்தது. காலை 6 1/2 மணிக்கு விஜயாவும் நானும் மழையிலேயே குடை பிடித்துக் கொண்டு கிளம்பினோம். பீச் பக்கம் சென்றால், அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டு உயரம் உயரமாக எழும்பிக் கொண்டிருந்தன. தண்ணீர் அருகில் சென்றோம். நாங்கள் இருவர் மட்டுமே அங்கு இருந்தோம். ஆர்ப்பரிக்கும் அலைகளைப் பார்க்க பார்க்க, மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஆள் உயரத்திற்கு அல்லது இரண்டு ஆள் உயரத்திற்கு அலைகள் எழும்பின. இதுவரை சாதுவாக, அலையின் ஓசையே அதிகம் கேட்காமல், மென்மையாகத் “தளும்பிக்” கொண்டிருந்த கடலா இது? என்ன ஒரு மாற்றம்! இயறகையின் இன்னொரு பக்கமும் அழகுதான். பத்து நிமிஷங்கள்

ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமி கோயில், அடையாறு.

நேற்று (ஞாயிறு, 9th மே) மாலை 5 மணி சுமாருக்கு விஜயாவும் நானும் “சிறிதாக கொஞ்சம்" walking போகலாம் என எண்ணி, 3rd அவென்யூவில்  போனோம். கொஞ்ச தூரம் என்பது 3rd அவென்யூவைத் தாண்டி, பெசண்ட் அவென்யூவில் தொடர்ந்தது. பெசண்ட் அவென்யூ முழுதும் நடந்த பிறகு, அங்கிருந்து அருகிலுள்ள ஸ்ரீ அனந்த பத்மனாப ஸ்வாமி கோயிலிற்கு போக ஆசைப்பட்டோம். டிராஃபிக்கினுள் நுழைந்து, புகுந்து கோயிலுக்குப் போனோம். கடைசியாக இந்தக் கோயிலுக்குச் சென்று சுமார் 2 ஆண்டுகள் ஆகியிருக்கும். திருவனந்தபுரத்தில் இருப்பது போலவே இங்கும் கோயில் அமைந்துள்ளது. பெருமாள் சயன கோலத்தில் காக்ஷி கொடுக்கிறார். மூன்று வாசல்கள் வழியாகத்தான் பெருமாளைத் தரிஸிக்க முடியும். கோயிலில் நுழைந்த சமயம் பெருமாளுக்கு தீபாராதனை ஆரம்பித்தனர். மனம் குளிர, மிக மகிழ்ச்சியோடு ஸ்வாமியை தரிஸித்தோம். தீபாராதனைக்குப் பிறகு, ப்ராகாரம் சுற்றி விட்டு, வீடு திரும்பினோம். கோயிலில், பூமாதேவி, ப்ரஹ்மா, தக்ஷிணாமூர்த்தி, திவாகர கருடன், இஷ்ட ஸித்தி விநாயகர், மஹாவிஷ்ணு, நவக்கிரகம், வீர ஆஞ்சனேயர் முதலானோர்க்கு தனித்தனி சன்னதிகள் இருக்கின்றன. அனந்த பத்மநாப ஸ்வாமி சி

மெரீனா பீச்சில் நாங்கள் !!

இன்று (8-5-2010) மாலை மெரீனா கடற்கரை செல்லலாம் என எண்ணி, 5 மணி சுமாருக்கு பஸ் நிறுத்தத்தில் போய் நின்றோம். வரும் பஸ்களில் எல்லாம் மந்தை மந்தையாக மனித கூட்டம் இறங்கி உள்ளூர் கடற்கரையை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். எல்லாமே வேறு பஸ்கள்; மெரீனா செல்லாத பஸ்கள். 1/4 மணி, 1/2 மணி, 40 நிமிஷங்கள் மெரீனா செல்லும் பஸ்ஸிற்காக காத்திருந்து, ஏமாந்து பின்னர் நாங்களும் உள்ளூர் பீச்சிற்கே சென்றோம்!! KALEIDOSCOPE என்று சொல்வார்களே, கடற்கரையில் KALEIDOSCOPE OF HUMANITY இருந்தது. ஒரு மணி நேரம் இருந்துவிட்டு வீடு திரும்பினோம். மெரீனா பீச் செல்லும் எங்கள் முதல் முயற்சி இவ்வாறாக பிசுபிசுத்து போயிற்று !! ராஜப்பா இரவு 8 மணி 8-5-2010

இயற்கையின் கொள்ளை அழகு

காலை வேளையில், ஏழு மணி சுமாருக்கு, வங்கக் கடலை பார்த்திருக்கிறீர்களா? சூரியன் கிழக்கே உதித்து, சிறிதே மேல் எழும்பி தன்னுடைய பொன்னிறக் கிரணங்களை தண்ணீர் மேல் அள்ளித் தெளித்திருப்பான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மொத்த நீர்ப் பரப்பும் சூரிய ஒளி பட்டு, தகத் தகவென தங்கத் தாம்பாளமாக, பளபளக்கும் வெள்ளித் தட்டாக காட்சி அளிக்கும் -  இந்த அழகு மனதை அள்ளிக் கொண்டு போகும். தினந்தோறும் காலை நான் இந்த கண்கொள்ளா இயற்கை அழகை ரசித்து, எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என அவனுக்கு நன்றி சொல்கிறேன். ராஜப்பா காலை 10:30 மணி 04-05-2010

மாதவப் பெருமாள் கோயில், மயிலாப்பூர்

மயிலாப்பூரில் சம்ஸ்கிருத காலேஜுக்குப் பின்னால் இந்த மாதவப் பெருமாள் கோயில் உள்ளது. 500 வருஷங்களுக்கும் மேல் புராதனமான, கீர்த்தி வாய்ந்த, அழகான கோயில். கோயிலுக்குப் போய் ஒன்றிரண்டு வருஷங்கள் ஓடிவிட்டன. போக வேண்டும் என தினமும் நினைத்துக் கொள்வேன்; கடைசியில், ஆறு நாட்களுக்கு முன்னால் ஏப்ரல் 28-ஆம் தேதி மாலை இந்த மாதவனை தரிஸிக்க சென்றோம். மூலவர் : மாதவப் பெருமாள். உற்சவர் : அர்விந்த மாதவன். தாயார் : அமிர்தவல்லி தாயார் . கோயிலில் பூவராஹன், ஆண்டாள், ராமர், பால ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. பெருமாளையும், தாயாரையும் கண்குளிர தரிஸித்து ஆனந்தமடைந்தோம். உற்சவப் பெருமாள் என்ன அழகு! இந்தக் கோயிலின் பக்கத்திலேயே பிரசித்தி பெற்ற ஸ்ரீ முண்டகக் கண்ணி அம்மன் கோயில் உள்ளது. மிக சக்தி வாய்ந்த அம்மன். கோயிலுக்கு போய் அம்மனை தரிஸித்தோம். அன்று காலை 1008 பால்குடம் எடுத்து விழா நடந்தது (அன்று சித்ரா பௌர்ணமி). “வங்கக் கடல் கடைந்த மாதவனை, கேசவனை, ” இருவரில் மாதவனை தரிஸித்தாயிற்று; அடுத்து கேசவன். (மயிலாப்பூரிலேயே கோயில் உள்ளது). ராஜப்பா காலை 10:00 மணி 04-05-2010