Skip to main content

Posts

Showing posts from June, 2009

ஸ்ரீகிருஷ்ண லீலா - விஷாகா ஹரி VISHAKHA HARI Day3

28 ஜுன் 2009 ஞாயிற்றுக்கிழமை (நாள் 3) இன்று நாங்கள் வழக்கத்தை விட 5 நிமிஷங்கள் தாமதமாக ஆஸ்திக ஸமாஜத்தை அடைந்தோம். வாசலில் குங்குமம், சந்தனம், சர்க்கரை, கல்கண்டு கொடுத்து "கல்யாண வரவேற்பு." வந்திருந்த பெண்மணிகள் அனைவருக்கும் மல்லிகைப் பூ கொடுத்தார்கள்! நிறையப் பேர் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புஷ்பம் அடங்கிய தாம்பாளங்களை எடுத்துவந்தனர். 4 - 5 பேர் பருப்புத்தேங்காய் (ஜோடி)கொண்டுவந்து மேடையில் வைத்தனர். நாம் வந்திருப்பது உபன்யாஸத்திற்கா, இல்லை இடம் மாறி கல்யாண மண்டபத்திற்கு போய்விட்டோமா என ஒரு கணம் வியந்து போனோம். மதுரா திரும்பி வந்தது. பல அஸுரர்களை அனுப்பியும் கண்ணனை கொல்ல முடியாததால், கண்ணனை மதுராவிற்கே அழைத்து கொல்ல கம்ஸன் திட்டமிட்டான். அக்ரூரன் என்பவனை அழைத்து, பிருந்தாவனம் சென்று கண்ணனை அழைத்து வருமாறு உத்தரவிட்டான். அக்ரூரனும் கோகுலம் புறப்பட்டான். அவன் கிருஷ்ண பக்தன் என்பதால் அவனுக்கு கொள்ளை ஆனந்தம், கண்ணனை நேரில், அருகில் பார்க்க இயலும் என்பதால். தனுர்யாகம் என்று அக்ரூரன் பொய்க்காரணம் சொன்னாலும், கண்ணனுக்கு உண்மை தெரியும். கம்ஸ வதத்திற்கு வேளை வந்துவிட்டது. ஆயர்பாடி ச

ஸ்ரீகிருஷ்ண லீலா - விஷாகா ஹரி VISHAKHA HARI Day2

27 ஜுன் 2009 சனிக்கிழமை (நாள் 2) கிருஷ்ணனின் லீலைகள் இன்றும் நாங்கள் மாலை 5 மணிக்கே ஆஸ்திக ஸமாஜத்திற்குச் சென்றுவிட்டோம். சரியாக 6-30க்கு ஸ்ரீமதி விஷாகா ஹரி தன் ஸங்கீத உபன்யாஸத்தை ஆரம்பித்தார். குழந்தை கண்னன் கோகுலத்தில் தன் அம்மா யஸோதாவிடம் செய்த லீலைகளுடன் உபன்யாஸம் களை கட்டியது. கண்ணன் மண் தின்றது. ஒரு நாள் பலராமனும், மற்ற சிறுவர்களும் யஸோதாவிடம் வந்து, கண்ணன் மண் தின்றதாக புகார் கூறினர். வாயைத்திறந்து காட்டுமாறு அவள் கேட்க, கண்ணன் தான் மண் திங்கவேயில்லை, பலராமனும், மற்றவர்களும் பொய் சொல்கிறார்கள் என்று சாதித்தான். யஸோதா விடாமல் வற்புறுத்தவே, கண்ணன் தன்னுடைய லீலையை ஆரம்பித்தான், குஞ்சு வாயை ஆவென்று திறந்து காட்டினான். பார்த்த யஸோதா வியப்பில் ஆழ்ந்தாள் - குழந்தையின் வாயில் அண்ட சராசரங்களும், பலப்பல கண்டங்களும், பாரத வர்ஷமும், பரத கண்டமும், அதனுள்ளே குட்டி கிருஷ்ணனும் - அந்த கண்ணன் வாயில் மீண்டும் அண்ட சராசரங்களும், கண்டங்களும், பாரத வர்ஷமும், மீண்டும் குட்டிக் கண்ணனும், அந்த குட்டிக் கண்ணன் வாயில் --- என தொடர்ந்து கொண்டே போயிற்று. யஸோதாவிற்கு "யார் இந்தக் குழந்தை" என ஒரே வி

ஸ்ரீகிருஷ்ண லீலா - விஷாகா ஹரி VISHAKHA HARI Day1

Day 1 : வெள்ளிக்கிழமை, 26 ஜூன் 2009 கண்ணன் பிறந்தான், எங்கள் கண்ணன் பிறந்தான். ஜூன் 26, 27, 28 தேதிகளில் ஆஸ்திக ஸமாஜத்தில் ஸ்ரீமதி விஷாகா ஹரியின் “ ஸ்ரீ கிருஷ்ண லீலா ” உபன்யாஸம் நடைபெறும் என்ற அறிவிப்பைப் பார்த்து, நேற்று (26) மாலை 5 மணிக்கும் முன்னதாகவே நானும் விஜயாவும் ஆஸ்திக ஸமாஜத்தில் ஆஜர். வழக்கம்போலவே கூட்டம் நிரம்பி வழிந்தது. சரியாக 6-30க்கு விஷாகா ஹரி உபன்யாஸத்தை ஆரம்பித்தார். பாரத தேசத்தில் யாருடைய புண்ய கதை அதிகமாக சொல்லப்படுகிறது, கேட்கப்படுகிறது, எழுதப்படுகிறது, படிக்கப்படுகிறது, பாட்டு எழுதப்படுகிறது, பாடப்படுகிறது என்று பார்த்தோமானால், அது ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றியதாகத்தான் இருக்கும். சந்தேகமேயில்லை. ஸ்ரீ கிருஷ்ணர் சரித்ரம் விஷ்ணுபுராணம், ஸ்ரீமத் பாகவதம் போன்று 4 நூல்களில் விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது என்றாலும், ஸ்ரீமத் பாகவதத்தில் இன்னும் விரிவாக் சொல்லப்பட்டிருப்பதால், தான் பாகவதத்தையே பின்பற்ற இருப்பதாக விஷாகா சொன்னார். ப்ரஹ்மா >> வஸிஷ்டர் >> சக்தி >> பராசரர் >> வ்யாஸர் இவர்கள் வம்சத்தில் வ்யாஸருக்கு மகனாகப் பிறந்தவர் ஸ்ரீசுகர் . அர்ஜுனனின் மகன

என்னுடைய புது செல் ஃபோன்

MY NEW CELL PHONE - SAMSUNG M200 அருண், அஷோக், அர்விந்த் மூவரும் சேர்ந்து 2006ஆம் வருஷம் ஜனவரி 31ஆம் தேதியன்று (எங்கள் திருமண நாள் பரிசாக) எனக்கு ஒரு செல்ஃபோன் வாங்கிக் கொடுத்தனர் - NOKIA Phone. Airtel-ன் lifetime package-ஐயும் வாங்கிக் கொடுத்தார்கள். இதுநாள் வரை இந்த ஃபோனை உபயோகித்து வந்தேன். திடீரென ஒருநாள் இதன் microphone பழுதுபட்டது. நான் பேசுவது எதிர்முனையில் கேட்காது. ஜூன் 6 (2009) அன்று மாலை அர்விந்த், விஜயா, அதிதியுடன் மயிலாப்பூர் விவேக் கடைக்குச் சென்று புதிதாக ஒரு ஃபோன் வாங்கினேன் SAMSUNG - M200. காமிரா (1.3 Mp), Video recording, FM recording, ஆகிய வசதிகள் உள்ளன. rajappa 11:20am on 07-09-2009

காஞ்சிபுரம் சென்றோம் Kanchipuram

KANCHIPURAM ஜூன் 4, 2009 காலை 0715க்கு, நான், விஜயா, கணேசன் ஆகிய மூவரும் ஒரு call taxi-யில் காஞ்சிபுரம் புறப்பட்டோம். இந்திராவும் வருவதாக இருந்தது, கடைசி நிமிஷத்தில் வர இயலாமற் போயிற்று. கணேசன் சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் காஞ்சி செல்வது வழக்கம். நான்தான் நீண்ட வருஷங்களுக்குப் பிறகு செல்கிறேன். போரூர் ஸ்ரீபெரும்பூதூர் வழியாக காஞ்சி சென்றோம்; ஒன்றரை மணி நேரப் பயணம். முதலில், ஸ்ரீராமா கஃபேயில் இட்லி, தோசை சாப்பிட்டோம்; இந்த ஹோட்டல் 65 வருஷங்களாக் இருக்கும் புராதனமான ஹோட்டல். பின்னர், ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். இந்தக் கோயிலிற்குப் பக்கத்தில்தான் விஜயாவின் வீடு இருந்ததது. எங்கள் கல்யாணம் (31-01-1971) இந்தக்கோயிலின் அருகிலுள்ள ராஜகோபால் கல்யாண மண்டபத்தில் நடந்தது. கணேசனும், விஜயாவும் 45-50 வருஷங்கள் பின்னோக்கிச் சென்று பழைய இனிய நினைவுகளில் மூழ்கி விட்டனர். பின்பு, விஜயா படித்த Sri Somasundara Kanya Vidhyalaya (SSKV) ஸ்கூலிற்கு சென்றோம். இந்த SSKV ஸ்கூலில் இந்திரா, காமாக்ஷி, விஜயா, லலிதா ஆகிய நால்வரும் படித்தனர். விஜயா மீண்டும் பழைய நினைவுகளில் மூழ்கினாள். அ

ஒரு இனிமையான மாலைப் பொழுது

Bhaja Govintham திருப்பதி-திருமலா தேவஸ்தானம் நேற்று (31-05-2009, ஞாயிறு) விஜயவாடாவில் “பஜகோவிந்தம்” விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. காலை முதலே விஜயவாடா பக்தி மழையில் நனைய ஆரம்பித்தது. ஊர் முழுதும் கோவிந்த நாம ஸங்கீர்த்தனம்தான். மாலையில் அங்குள்ள ஒரு முனிசிபல் விளையாட்டு அரங்கில், பஜனைகள் ஆரம்பித்தன. பல மடாதிபதிகளும், TTDயின் தலைமை அதிகாரிகளும், சுற்றியுள்ள பல மாவட்டங்களிருந்து பொதுமக்களும், பஜனை மண்டலிகளும் அங்கு குழுமின. லக்ஷத்திற்கும் அதிகமானோர் அங்கு இருந்தனர். ஸ்ரீஹரி, ஸ்ரீவேங்கடேசா, ராமர், கிருஷ்ணர், ஹனுமந்தா ஆகியோர் மீது பஜனைப் பாடல்கள் பாடினார்கள். கூடவே லக்ஷம் பேரும் பாடியது கேட்கவே பரமானந்தமாகயிருந்தது. எங்கும் கோலாட்டம், கும்மி, நடனம் ... பார்க்க பரவசமாக இருந்தது. TTDயின் பக்தி channel SVBC யில் நேரடி ஒளிபரப்பு நான் பார்த்தேன். ஒரு இனிமையான மாலைப்பொழுது. முன்னதாக, 09-05-2009 ஞாயிறு அன்று,ஹைதராபாதில் Parade ground-ல் அன்னமாச்சார்யாவின் 601-வது பிறந்த நாள் விழாவை TTD ஏற்பாடு செய்தது. ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் தலப்பாகா என்னும் ஊரில் 9 மே 1408-ஆம் வருஷம் அன்னமாச்சார்யா பி