Skip to main content

Posts

Showing posts from January, 2009

மாவிளக்கு Maavilakku

மாவிளக்கு மாவிளக்கு போடுவது என்பது நம் குடும்பத்தில் தொன்றுதொட்டு வரும் பழைமையான ஒரு சம்பிரதாயம். நம் அம்மா சொல்லிக் கொடுத்த ஒரு நல்ல வழக்கம். நம் குலதெய்வம் ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் மற்றும் ஸ்ரீ வைத்தியநாதஸ்வாமி என்பதால் புரட்டாசி மாஸம் சனிக்கிழமையன்று மாவிளக்கு வீட்டில் ஏற்றுவது என்பது வழக்கம். ஆடி மாஸம் மற்றும் தை மாஸம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவதும் வழக்கம். சிற்றஞ்சிறு காலே எழுந்து, குளித்து, வீட்டையும் ஸ்வாமி பிறையையும் நன்கு அலம்பி, கோலம் போட்டு, ஒரு சுத்தமான தாம்பாளத்தில் மாவிளக்கு போட வேண்டும். அரிசியைக் களைந்து சுத்தப்படுத்திய பின், மாவாக அதை அரைத்துக் கொள்ளவும். வெல்லம் சேர்த்து மாவில் நன்கு கலக்கவும். நடுவில் விளக்கு போல் குழித்து, திரி போட்டு, நிறைய நெய் விட்டு, விளக்கை ஏற்றவும். அம்மனுக்காக என்றால் இரண்டும், ஸ்வாமிக்காக (புரட்டாசி சனிக்கிழமை) என்றால் ஒரு விளக்கும் ஏற்ற வேண்டும். புஷ்பங்கள் சாற்றி, வெற்றிலை, பழம், தேங்காய் நைவேத்யத்துடன் ஒரு பாயஸமும் செய்து ஸ்வாமிக்கு / அம்மனுக்கு நைவேத்யம் பண்ணலாம். தூப, தீப, கற்பூர தீபாராதனை செய்து, நமஸ்காரம் செய்யவேண

அன்னதானம் Annadhaanam

அன்னதானம். ANNADHAANAM பல ஊர்களிலே, பல கோயில்களிலே, பல இடங்களிலே அன்னதானம் தினம் தினம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிவோம். இந்தப் பதிவு அதைக் குறித்து அல்ல. மயிலாப்பூர் ஸ்ரீசாய்பாபா கோயிலில் என்றைக்குப் போனாலும் எப்போது போனாலும் இரவானாலும், பகலானாலும் உங்களுக்கு தொன்னை நிறைய சுடச் சுட வெண்பொங்கலோ, சக்கரைப் பொங்கலோ, புளியோதரையோ, தயிர் சாதமோ கிடைப்பது நிச்சயம். ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் (Mar-Apr) மயிலாப்பூர் கோயிலில் உத்சவம் நடைபெறும் - அறுபத்துமூவர் விழாவன்று RK Mutt ரோட்டில் ஸ்வாமி ஹால் தொடங்கி, இரண்டு கிமீ தூரத்திற்கு பத்தடிக்கொன்றாக சிறுசிறு "அன்னதான ஸ்டால்கள்" போட்டு, எல்லாருக்கும் வாரி வாரி வழங்குவார்கள். வழங்குபவர்கள் நம்மைப் போன்ற சாதாரண மக்கள்தான். ஸ்ரீராமகிருஷ்ண மடம் முன்பாகவும், மந்தைவெளி பஸ் டிப்போ அருகிலும் இலை நிறைய இரண்டு விதமான சாப்பாடு வழங்குவார்கள். இதற்கு 2-3 நாட்கள் முன்பாக நடக்கும் திருத்தேர் விழாவின்போது, வீடு தோறும் தங்களால் முடிந்த அளவு சாப்பாடு கொடுப்பார்கள். இதுபோன்று, சென்னையில் நூற்றுக்கணக்கான கோயில்களை ஒட்டி வாழும் சாதாரண மக்கள் அளிக்

Sri Andal Thirukkalyanam - VISHAKHA HARI

ஆண்டாள் திருக்கல்யாணம் - விஷாகா ஹரி VISHAKHA HARI சென்னை ராஜா அண்ணாமலைபுரம், செட்டிநாடு வித்யாஷ்ரம் ராஜா முத்தையா அரங்கில், மார்கழி மஹோத்ஸவத்தில் 2008 டிசம்பர் 15ஆம் தேதி விஷாகா ஹரியின் இந்த உபன்யாசம் நிகழ்ந்தது. நேரில் போய் கேட்கவேண்டும் என்று ஆவல் அதிகமாக இருந்தபோதிலும், அன்று போக இயலவில்லை. பின்னர், 2009 ஜனவரி 2ஆம் தேதியன்று டீவியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. பார்த்தேன், ரசித்தேன். ஸ்ரீஆண்டாளைப் பற்றியும், விஷாகா ஹரியைப் பற்றியும் புதிதாக எழுத என்ன இருக்கிறது! பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவார் ஸ்ரீஆண்டாளைப் பற்றியும், அவர் எழுதிய திருப்பாவை விளக்கமும் சுஜாதா எழுத்தில் இங்கே. ராஜப்பா 3-1-2009 1000 மணி