Skip to main content

Posts

Showing posts from October, 2009

சாணை பிடிக்கலையோ, சாணா .... knife sharpening

இந்தக் குரலை சமீபத்தில் எப்போது கேட்டீர்கள்? பல ஊர்களில் இது முற்றிலுமாக அழிந்துவிட்ட்து என்றே தோன்றுகிறது. டெக்னாலஜியும் பணச் செழிப்பும் வளர்ந்துள்ள இந்நாட்களில், ”கத்திக்கு சாணை பிடிப்பது என்றால் என்ன,” என்று அதிசயப்படும் ஒரு  தலைமுறையே உள்ளது. இப்போதும், சாணை பிடிக்கும் தொழிலாளி தன் உபகரணங்களை தன் கையிலும் முதுகிலுமே தூக்கிக்கொண்டு, எல்லா இடங்களுக்கும் நடந்தே சென்று தன் வயிற்றுப் பிழைப்பை நடத்துகிறார். ஆண்டாண்டு காலமாக இந்த உபகரணங்களும் மாறவில்லை, தொழிலாளியும் மாறவில்லை. அதே உழைப்பு, அதே வறுமை. சாணை பிடிக்கும் (கூர் தீட்டும்) வட்ட வடிவமான “சொரசொரப்பு” சக்கரம் (grinding stone), சக்கரத்தை இணைக்க ஒரு பெல்ட், கீழே ஒரு பெரிய சைக்கிள் சக்கரம், இந்த சக்கரத்தைச் சுற்ற ஒரு கால்மிதி (foot pedal). இவ்வளவுதான் உபகரணங்கள். கால்மிதியை அழுத்த அழுத்த, மேலே உள்ள சொரசொரப்பு சக்கரம் வேகமாக சுழல்கிறது. கத்தியின் ஒரு முனையை தன் கட்டை விரலால் அழுத்திக் கொண்டு, கத்தியின் இரண்டு பக்கங்களையும் சுழலும் சக்கரத்தில் ஓட்டினால் நெருப்புப் பொறிகள் பறக்கும். பொறிகள் பறப்பதைப் பார்க்கவே சிறுவர்கள்-சிறுமிகள் கூட

ஸீதாப் பழம் Sitafal

Sitafal, Ramfal, Custard Apple, Sugar apple எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் ஸீதாப்பழம் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பழம். எனக்கு மட்டுமல்ல, விஜயா, அருண், அஷோக், அர்விந்த் எல்லாருக்குமே மிகப் பிடித்தது. ஆந்திர மாநிலத்தில் இப்பழம் நிறைய விளைகிறது. பெரும்பாலான ஆந்திரமக்கள் இதை விரும்பி சாப்பிடுவார்கள். நாங்கள் 27 வருஷங்களுக்கும் மேலாக் ஹைதராபாதில் வாழ்ந்தபடியால் எங்களுக்கும் பிடித்து விட்டது. ஹைதராபாதில் ஸீதாப்பழம் கொட்டி கொட்டி கிடைக்கும். பெங்களூரிலும் இது நிறைய கிடைக்கும். தமிழ்நாட்டில் இது கிடைப்பது அரிது. ஹைதராபாதில் ”ஸீதாஃபல் மண்டி” என்றே ஒரு இடம் அழைக்கப்படுகிறது. 1990-91 என நினைக்கிறேன் - என்னுடைய அசிஸ்டெண்டிடம் “மண்டியிலிருந்து கொஞ்சம் ஸீதாப்பழம் வாங்கி” வரச் சொன்னேன். சனிக்கிழமை காலை அவனும் வாங்கி வந்தான் - திகைத்து விட்டோம்! நம்பினால் நம்புங்கள், ஒரு பெரிய கோணிப்பை நிறைய - 150-200 பழங்கள் இருக்கும் - வாங்கி வந்தான். “மிக மலிவு” என்று சமாதானம் சொன்னான். ஆனால், சாப்பிட்டு முடித்து விட்டோம். பழம் இனிப்பாக இருக்கும்; கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளை நிற “சுளைகளை” மென்று விட்டு, உள்ள

சூர சம்ஹாரம் Soora Samharam

சூரபத்மன் என்ற அசுரன் கடுமையான தவம் புரிந்து, “தற்போது இருக்கும் எந்த தெய்வத்தாலும் தான் கொல்லப்படக் கூடாது” என்ற வரத்தைப் பெற்றான். பின்னர் தான் கொல்லப்பட மாட்டோம் என அஹம்பாவம் கொண்டு எல்லா தேவர்களையும் துன்புறுத்த ஆரம்பித்தான். பரமசிவன் இவனை அழிப்பதற்க்காக ஒரு புதிய தெய்வத்தை, தனது ஞானக் கண்ணினால் உருவாக்கினார் - இவர்தான் கந்தன், சுப்பிரமணியம், கார்த்திகேயன், ஆறுமுகம் என பலப் பல பெயர்களால் அழைக்கப்படும் முருகப்பெருமான். பார்வதி தேவி முருகனுக்கு வீர வேல் வழங்கினார். முருகன் சூரபத்மனை எதிர்கொண்டதே கந்த சஷ்டி என்று கொண்டாடப் பெறுகிறது. ஆஸ்வீன (ஆஷாட) மாசத்தில் சுக்ல அமாவாசை முதல் ஆறு நாட்களுக்கு இந்த விழா எல்லா முருகன் கோயில்களிலும் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆறு நாட்களிலும் பக்தர்கள் சஷ்டி விரதம் இருப்பார்கள். கஜமுகாசுரன், சிங்கமுகாசுரன், சூரபத்மன் ஆகிய அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்ட முருகப்பெருமான், ஆறாம் நாள் சஷ்டியன்று அசுரர்களை அழித்த சூர சம்ஹாரம் நடைபெறும். எல்லா முருகன் கோயில்களிலும் லக்ஷக்கணக்கில் பக்தர்கள் வந்து இதைக் கண்டு களிப்பார்கள். சமுத்திரம், அல்லது வேறு நீர்ந

ஸ்ரீ பார்த்தஸாரதி பெருமாள் கோயில், திருவல்லிக்கேணி

2008 ஆம் வருஷம் மே மாசம் ஸ்ரீ பார்த்தஸாரதி பெருமாளைத் தரிசித்தோம் ( படிக்க ). அதற்குப் பிறகு நேற்று (18-10-2009) மாலைதான் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. மாலை 5 மணிக்குக் கிளம்பினோம்; கோயிலில் நுழையும்போது 5-45. பெருமாளின் தரிசனம் நன்கு கிடைத்தது. திருப்தியுடன் தரிசித்து விட்டு, கடைத்தெருக்களை பார்த்து விட்டு, ஆட்டோவில் வீடு திரும்பினோம். கோயில் புதுப்பிக்கப் பட்டுள்ளது; நிறைய விளக்குகள் போட்டு, ஒளிமயமாக உள்ளது. கர்ப்பக் கிரஹத்திற்கு அருகில் ஏசி வசதி பண்ணி இருக்கின்றனர். பல இடங்களில் RAMP வசதி பண்ணப்பட்டுள்ளது. ராஜப்பா 19-10-2009 0700 மணி

மெரீனா கடற்கரை (4)

நேற்று (17-10-2009) காலை 6-45க்கு நான் மெரீனா கடற்கரை சென்றேன். வானொலி நிலைய்த்திலிருந்து நடக்க ஆரம்பித்து, கண்ணகி சிலையையும் தாண்டி கொஞ்ச தூரம் நடந்த பின்னர், திரும்ப கண்ணகி சிலைக்கு வந்து, பஸ் பிடித்து வீடு திரும்பினேன். நல்ல நடை. இன்று ஞாயிறு (18-10-2009) காலை 6-30க்கு கிளம்பி, பஸ்ஸில் கண்ணகி சிலை வரை சென்று, அங்கிருந்து நடக்க ஆரம்பித்து, Napier bridge, ஜார்ஜ் கோட்டையைத் (Fort St George) தாண்டி ரிஸர்வ் வங்கி வரை நடந்தேன். பின்பு அங்கிருந்தே பஸ் ஏறி வீடு திரும்பினேன். ராஜப்பா காலை 0930 18-10-2009

மற்றும் ஒரு தீபாவளி

இன்று (17-10-2009) தீபாவளிப் பண்டிகை. எங்களுக்குக் கிடையாது (பெரிய மன்னி காலமானதால்). போன வருஷமும் தீபாவளி கொண்டாடவில்லை (கிரிஜா காலமாகி ஒரு வருஷம் நிறைவடையாததால்). வழக்கம்போல விடியற்காலம் 4-30 க்கு எழுந்து, நீராடி, பாராயணங்கள் பண்ணி, கீதை படித்து, பின்னர் 7 மணிக்கு மரீனா கடற்கரை சென்றேன். அங்கு 45 நிமிஷங்கள் நடந்தபின், வீடு திரும்பினேன். பல பேர் போனில் வாழ்த்து தெரிவித்தனர். விஜயா குலாப் ஜாமூன், ஓமப்பொடி பண்ணினாள்.   குழந்தை அதிதி மிகவும் மகிழ்ச்சியாக மத்தாப்புக்கள் கொளுத்தினாள். ராஜப்பா 09:30 17-10-2008