Skip to main content

Posts

Showing posts from 2009

குசேலோபாக்கியானம் - விஷாகா ஹரி Vishakha Hari

நேற்று (15-12-2009) மாலை 3-45 மணி சுமாருக்கு திடீரென மழை கொட்ட ஆரம்பித்தது. மழை என்றால் அப்படி ஒரு மழை. விஷாகா ஹரியின் கதாகாலட்சேபத்திற்கு எப்படி போவது? மழை கொஞ்சம் விட்டதும், ஒரு ஆட்டோ பிடித்து, நானும் விஜயாவும் MRC நகரிலுள்ள குமாரராஜா முத்தையா செட்டியார் அரங்கத்திற்கு சென்றோம். மழையினால் கூட்டம் கொஞ்சம் குறையும் என எண்ணினோம். 6-30க்கு ஆரம்பமாகும் நிகழ்ச்சிக்கு 5 மணிக்கு நுழைந்தால் .. அரங்கம் நிரம்பி வழிந்தது!! 6-30க்கு the hall was packed! வழக்கம்போல சிரித்த முகத்துடன் ஸ்ரீமதி விஷாகா ஹரி தன் கதா காலட்சேபத்தை ஆரம்பித்தார்; சுதாமா என்கிற குசேலரைப் பற்றிய கதை – குழந்தைக்கும் தெரிந்த கதை. “சேல” என்றால் வஸ்திரம், ஆடை; “கு_சேல” என்றால் கிழிந்த வஸ்திரம், கிழிந்த ஆடை. சுதாமா மிகவும் வறியவர், அவரது ஆடைகள் எப்போதும் கிழிந்தே காணப்படும் என்பதால், அவர் “குசேலர்” என அழைக்கப்பட்டார். சுதாமாவும், ஸ்ரீகிருஷ்ணனும் சிறுவயதில் ஒன்றாகப் படித்தவர்கள், சிறந்த நண்பர்கள். பிற்காலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் த்வாரகாவின் மஹாராஜாவாக ஆனார்; சுதாமாபுரி (தற்போதைய போர்பந்தர்)என்னும் ஊரில் சுதாமா தன் மனைவி, குழந்த

எப்படிப் பாடினாரோ ..

சுத்தானந்த பாரதியார் எப்படி பாடினாரோ அடியார் அப்படி பாட நான் ஆசை கொண்டேனே, சிவனே அப்பரும் சுந்தரரும் ஆளுடைய பிள்ளையும் அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே குருமணி சங்கரரும் அருமை தாயுமானவரும் அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும் கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம் ராஜப்பா 12-12-2009 10:30 காலை

Nithyasree's Tribute to DK Pattammal

Smt Nithyashree paid a rich tribute to the great legend (late) Smt DK Pattammal on 11th Dec 2009 at Chettinad Auditorium, MRC nagar. DKP is the paatti of Nithyashree. We two reached the hall by 5-15PM and waited comfortably for the start of the kutchery at 6-30. The hall was 80% full by 5-15 and 100% by 6-25. Nithyashree started with “வந்தனமு ரகுநந்தனா, சேது பந்தனா .. ஸ்ரீராமா வந்தனமு” , a Thyagaraja keertanai. She followed it with Papanasam Sivan composition “ஆண்டவனே உனை நம்பினேன்” and then with Muthuswami Dikshitar keertanai “கஞ்ச தளாயதாக்ஷி, ஸ்ரீகாமாக்ஷி,” a tribute to Sri Kamakshi amman. Then came Arunachala Kavirayar’s composition, “யாரோ இவர் யாரோ – என்ன பேரோ அறியேனே,” Sita’s enquiries after seeing Sri Rama on the roads of Mythila. Then another Muthuswami Dikshitar composition (மாமோ பட்டாபிராமா) . Nithyasree then sang a Shyama Sastri composition ”பராகேல நன்னு பரிபாலன” . Next was Suththanantha Bharathiyar’s ”தூக்கிய திருவடி துணையென நம்பினேன்” on Sri Nataraja. When she sa

KVS Athimber Varushaptikam

One year has gone by since KVS athimber left us last year on 25 Nov 2008. Yesterday (Wednesday, 9 Dec 2009) was the Varusha aptika Sraththam. We two left our house by 07-15 (arvind dropped us at the bus stand) and we went by 47A and 71E (from Taylors Road); reached Ambattur by 9 AM. Sastrigals started the rituals by 1045 and it was over by 1245. 2 brahmanals ate. Then we had meals. Apart from Padma akka, Prakash, Rajeswari, Srividya, we were the only two extra. Srividya’s husband and daughters didn’t come because of exams. Rajeswari and Srividya prepared the entire sraththam meals. Saroja and athimber came there by 6PM. After night meals, all of us slept there. Thursday, 10 Dec 2009: Today is the subhasyam (grekkiam). Jayaraman, Kalyani, Purnima, Rajeswari’s parents, KVS’s nephew Ramakrishnan and his wife (total 11 + 4) were the additions today. The rituals started at 0945 and ended at 1145; we fifteen ate by 12 noon. Rajeswari and Srividya prepared the meals. We took rest till 3PM

காலை நடைப் பயிற்சி

மழை காரணமாக சென்ற ஆறு நாட்களாக காலையில் நடைப் பயிற்சி போக முடியவில்லை; நேற்றுதான் மீண்டும் ஆரம்பித்தேன். ஒரு புதிய இடத்தைக் கண்டுபிடித்தேன். இன்று (11-11-2009) காலை இந்த புதிய இடத்திற்கு சென்றேன்; வீட்டிலிருந்து 12 நிமிஷ தூரத்தில், RA Puram சாந்தோம் நெடுஞ்சாலையில் பட்டினப்பாக்கம் (Foreshore Estate) போகும் வழியில் உள்ளது. CENTRAL INSTITUTE OF BRACKISH WATER AQUACULTURE   (brackish water  = having somewhat a salty taste from a mixture of seawater and fresh water) , a UN-supported FAO institute for fish, prawns and shrimp culture, managed by Indian Council of Agricultural Research . நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 300 மீட்டர் உள்ளே ஆஃபீஸ் இருக்கிறது. இந்த 300 மீட்டர் தூரத்திற்கும் மிக அழகான, சுத்தமான, இருவழி தார் ரோடு போடப்பட்டுள்ளது. நடுவில் median ம், ஓரங்களில் அழகிய 4 அடி அகல நடைபாதைகளும் உள்ளன. சாலையின் இரு பக்கங்களிலும் நிறைய வேப்ப மரங்கள்; நிறைய செடி, கொடிகள். ஜன சந்தடி கிடையாது, பஸ், கார்கள் இரைச்சலும் கிடையாது. காலை வேளையின் இனிமையான இதமான சூழலும், வேப்பங்காற்று தரும் புத்துணர

Srimad Bhagavatham ஸ்ரீமத் பாகவதம் - வேளுக்குடி கிருஷ்ணன்

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் இன்று (9-11-2009, திங்கட்கிழமை) காலை பொதிகை டீவியில் “கண்ணனின் கதையமுதம்” என்ற தலைப்பில் ஸ்ரீமத் பாகவதம் உபன்யாஸம் துவங்கினார். காலை 6-30க்கு. இது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் என அவர் குறிப்பிட்டார். வேதத்தை விளக்க ஸ்ரீராமாயணம், மஹாபாரதம் என்னும் இரண்டு இதிஹாசங்களும், பதினெட்டு புராணங்களும் உள்ளன. புராணம் என்றால் காலத்தால் பழமையாக இருந்தாலும் கருத்தால் எப்பொழுதும் புதிதாக இருக்கும்.புரா + அபி + நவம். கதை நடந்த காலத்திற்கு மிக பின்னால் எழுதப்பட்டவை புராணங்கள். ஆனால், இதிஹாசங்கள் கதை நடந்தபோதே எழுதப்பட்டவை. ஸ்ரீமத் பாகவத புராணத்தை வ்யாசர் எழுதினார். மஹாவிஷ்ணுவின் 10 அவதாரங்களையும் அவற்றில் வரும் பல கதைகளையும் அடக்கியது.   ஸ்ரீ சுகாசார்யர் இதை பரீக்ஷித் மஹாராஜாவிற்கு ஏழு நாட்களில் உபதேசித்தார். ப்ரஹ்மாவின் குமாரர் வசிஷ்டர் -- சக்தி -- பராசரர் -- வ்யாஸர் -- ஸ்ரீ சுகர் இது வசிஷ்டரின் வம்ஸாவளி. மொத்தம் 12 ஸ்கந்தங்கள் (அத்தியாயங்கள்). பிறப்பின் மூலத்தை முதல் ஸ்கந்தத்தில் ஆரம்பித்து, பிரளயம், கலிகாலத்துடன் 12ம் ஸ்கந்தம் முடிவுறுகிறது. இட

ஸ்ரீமத் பகவத் கீதை - வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்

கீதை உபன்யாஸம் இன்றோடு (6-11-2009, வெள்ளிக்கிழமை) நிறைவு பெற்றது. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் சுமார் 3 வருஷங்களாக் 735 உபன்யாஸங்கள் செய்தார். 18 அத்தியாயங்கள், 700 ஸ்லோகங்கள். யத்ர யோகேச்வர: க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தனுர்தர: | தத்ர ஸ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மம || rajappa 10:50 AM on 6 Nov 2009

இருட்டுக் கடை ஹல்வா

புகழ்பெற்ற ஸ்ரீ நெல்லையப்பர் கோயிலுக்கு நேர் எதிரில், கீழ தேரடி வீதியில் திருநெல்வேலியின் இருட்டுக் கடை ஹல்வா கடை உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுதும் பெயர் பெற்ற கடை. ராஜஸ்தானத்திலிருந்து வந்த ஒரு குடும்பத்தினரால் 90 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பெற்றது. இன்றைக்கும் இந்தக் குடும்பத்தின் வழி வந்தவர்களே கடையை நிர்வகிக்கின்றனர். மாலை 5 மணிக்குத்தான் கடை திறக்கும்; இரவு 10 மணிக்கு மூடிவிடுவார்கள். ஒளி தர எண்ணெய் விளக்குகள் மட்டுமே. “இருட்டுக் கடை” என்ற பெயர் வந்ததே இதனால்தான். கடை இருட்டாக இருக்கலாம்; ஆனால், ஹல்வாவின் ருசியும் மணமும்! எப்பொழுதும் நிரம்பி வழியும் கூட்டமே இதற்கு சாட்சி. கடையின் வெளியில் ஒரு சின்ன போர்டு கூடக் கிடையாது. ஆனாலும் கூட்டத்திற்கு என்னவோ குறைவே இருக்காது. பல கோடி ரூபாய்களை விளம்பரத்திற்காக செலவிடும் MNCக்கள் இந்தக்க் கடையை Marketing Study பண்ணவேண்டும். 2003ல் (சுபா - மகேஷ் திருமணத்திற்கு முன்பு) நான் தி-வேலி சென்று Mr ராஜாமணி அவர்கள் (மகேஷின் அப்பா) வீட்டில் தங்கியபோது முதல்முறையாக இருட்டுக் கடை ஹல்வா கடைக்குச் சென்றேன். 1/2 கிலோ ஹல்வா வாங்கியதாக ஞாபக

வெந்தயக் கீரை சாம்பார்

நேற்று காலை வெந்தயக்கீரை (Methi) வாங்கினேன். ” யானை விலை, குதிரை விலை ” என்று சொல்வார்களே, அதை திருத்தி, “ வாழை விலை, வெந்தயக்கீரை விலை ” என இனி சொல்லவேண்டும். ஒரு கட்டு ரூ. 13/- !! (வாழைக்காய் 6/-) கீரையை ஆய்ந்து, நறுக்கி சாம்பார் பண்ணினோம். சுடச்சுட சாம்பாரும், சப்பாத்தியும் தான் இன்றைய லஞ்ச். இந்த கூட்டணி எனக்கு மிகவும் பிடித்தமானது. ரசித்து, ருசித்து சாப்பிட்டேன். வெந்தயக்கீரை சாம்பார் செய்முறை எனக்குத் தெரியாது. வெந்தயக்கீரை சாதம் பற்றிய செய்முறை இங்கு படிக்கவும் (ராஜி-வாசு எழுதியது) ராஜப்பா 5-11-2009 9-05 AM

குருக்ஷேத்திரம் - ஸ்ரீமத் பகவத்கீதை

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் முன்னோரான குரு என்னும் மஹாராஜா இந்த ஊருக்கு வந்து அஷ்ட குணா வித்துக்களை விதைக்க ஆசைப்பட்டார். மனிதனுக்கு நல்லது சொல்லி, அவனை பகவானிடம் சேர்க்க, இந்த எட்டு நற்குணங்களும் தேவை என அவர் உறுதியாக நம்பினார். தபசு (உடலையும், உள்ளத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்), தயா (எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுதல்), க்ஷமா (எல்லாரிடத்திலும் பொறுமை காத்தல்), சௌசம் (மனதிலும், உடலிலும், வாக்கிலும் தூய்மை), தானம் (தனக்கு உபயோகமாயிருப்பதை தேவையான பிறருக்கு தானமாக தருதல்), ஸத்யம் (எப்போழுதும் உண்மையே பேசுவது), யக்ஜம் (ஸாஸ்திரம் சொல்லியுள்ள கர்மங்களை தினமும் செய்வது), ப்ரஹ்மசரியம் , ஆகியவையே இந்த எட்டு குணங்கள். இவரது குறிக்கோளை அறிந்து, மனமகிழ்ச்சி அடைந்த பகவான், இந்த ஊரே உன் பெயரால் இன்றுமுதல் குருக்ஷேத்திரம் என அழைக்கப்படும் என்று அருளினார். இங்குதான் மஹாபாரத யுத்தம் நிகழ்ந்தது; ஸ்ரீமத் பகவத் கீதையும், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமமும் இங்குதான் அருளப்பட்டன. ” தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ---” என்று துவங்கும் கீதையின் முதல் ஸ்லோகத்துடன் சுமார் மூன்று வருஷங்களுக்

சாணை பிடிக்கலையோ, சாணா .... knife sharpening

இந்தக் குரலை சமீபத்தில் எப்போது கேட்டீர்கள்? பல ஊர்களில் இது முற்றிலுமாக அழிந்துவிட்ட்து என்றே தோன்றுகிறது. டெக்னாலஜியும் பணச் செழிப்பும் வளர்ந்துள்ள இந்நாட்களில், ”கத்திக்கு சாணை பிடிப்பது என்றால் என்ன,” என்று அதிசயப்படும் ஒரு  தலைமுறையே உள்ளது. இப்போதும், சாணை பிடிக்கும் தொழிலாளி தன் உபகரணங்களை தன் கையிலும் முதுகிலுமே தூக்கிக்கொண்டு, எல்லா இடங்களுக்கும் நடந்தே சென்று தன் வயிற்றுப் பிழைப்பை நடத்துகிறார். ஆண்டாண்டு காலமாக இந்த உபகரணங்களும் மாறவில்லை, தொழிலாளியும் மாறவில்லை. அதே உழைப்பு, அதே வறுமை. சாணை பிடிக்கும் (கூர் தீட்டும்) வட்ட வடிவமான “சொரசொரப்பு” சக்கரம் (grinding stone), சக்கரத்தை இணைக்க ஒரு பெல்ட், கீழே ஒரு பெரிய சைக்கிள் சக்கரம், இந்த சக்கரத்தைச் சுற்ற ஒரு கால்மிதி (foot pedal). இவ்வளவுதான் உபகரணங்கள். கால்மிதியை அழுத்த அழுத்த, மேலே உள்ள சொரசொரப்பு சக்கரம் வேகமாக சுழல்கிறது. கத்தியின் ஒரு முனையை தன் கட்டை விரலால் அழுத்திக் கொண்டு, கத்தியின் இரண்டு பக்கங்களையும் சுழலும் சக்கரத்தில் ஓட்டினால் நெருப்புப் பொறிகள் பறக்கும். பொறிகள் பறப்பதைப் பார்க்கவே சிறுவர்கள்-சிறுமிகள் கூட

ஸீதாப் பழம் Sitafal

Sitafal, Ramfal, Custard Apple, Sugar apple எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் ஸீதாப்பழம் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பழம். எனக்கு மட்டுமல்ல, விஜயா, அருண், அஷோக், அர்விந்த் எல்லாருக்குமே மிகப் பிடித்தது. ஆந்திர மாநிலத்தில் இப்பழம் நிறைய விளைகிறது. பெரும்பாலான ஆந்திரமக்கள் இதை விரும்பி சாப்பிடுவார்கள். நாங்கள் 27 வருஷங்களுக்கும் மேலாக் ஹைதராபாதில் வாழ்ந்தபடியால் எங்களுக்கும் பிடித்து விட்டது. ஹைதராபாதில் ஸீதாப்பழம் கொட்டி கொட்டி கிடைக்கும். பெங்களூரிலும் இது நிறைய கிடைக்கும். தமிழ்நாட்டில் இது கிடைப்பது அரிது. ஹைதராபாதில் ”ஸீதாஃபல் மண்டி” என்றே ஒரு இடம் அழைக்கப்படுகிறது. 1990-91 என நினைக்கிறேன் - என்னுடைய அசிஸ்டெண்டிடம் “மண்டியிலிருந்து கொஞ்சம் ஸீதாப்பழம் வாங்கி” வரச் சொன்னேன். சனிக்கிழமை காலை அவனும் வாங்கி வந்தான் - திகைத்து விட்டோம்! நம்பினால் நம்புங்கள், ஒரு பெரிய கோணிப்பை நிறைய - 150-200 பழங்கள் இருக்கும் - வாங்கி வந்தான். “மிக மலிவு” என்று சமாதானம் சொன்னான். ஆனால், சாப்பிட்டு முடித்து விட்டோம். பழம் இனிப்பாக இருக்கும்; கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளை நிற “சுளைகளை” மென்று விட்டு, உள்ள

சூர சம்ஹாரம் Soora Samharam

சூரபத்மன் என்ற அசுரன் கடுமையான தவம் புரிந்து, “தற்போது இருக்கும் எந்த தெய்வத்தாலும் தான் கொல்லப்படக் கூடாது” என்ற வரத்தைப் பெற்றான். பின்னர் தான் கொல்லப்பட மாட்டோம் என அஹம்பாவம் கொண்டு எல்லா தேவர்களையும் துன்புறுத்த ஆரம்பித்தான். பரமசிவன் இவனை அழிப்பதற்க்காக ஒரு புதிய தெய்வத்தை, தனது ஞானக் கண்ணினால் உருவாக்கினார் - இவர்தான் கந்தன், சுப்பிரமணியம், கார்த்திகேயன், ஆறுமுகம் என பலப் பல பெயர்களால் அழைக்கப்படும் முருகப்பெருமான். பார்வதி தேவி முருகனுக்கு வீர வேல் வழங்கினார். முருகன் சூரபத்மனை எதிர்கொண்டதே கந்த சஷ்டி என்று கொண்டாடப் பெறுகிறது. ஆஸ்வீன (ஆஷாட) மாசத்தில் சுக்ல அமாவாசை முதல் ஆறு நாட்களுக்கு இந்த விழா எல்லா முருகன் கோயில்களிலும் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆறு நாட்களிலும் பக்தர்கள் சஷ்டி விரதம் இருப்பார்கள். கஜமுகாசுரன், சிங்கமுகாசுரன், சூரபத்மன் ஆகிய அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்ட முருகப்பெருமான், ஆறாம் நாள் சஷ்டியன்று அசுரர்களை அழித்த சூர சம்ஹாரம் நடைபெறும். எல்லா முருகன் கோயில்களிலும் லக்ஷக்கணக்கில் பக்தர்கள் வந்து இதைக் கண்டு களிப்பார்கள். சமுத்திரம், அல்லது வேறு நீர்ந

ஸ்ரீ பார்த்தஸாரதி பெருமாள் கோயில், திருவல்லிக்கேணி

2008 ஆம் வருஷம் மே மாசம் ஸ்ரீ பார்த்தஸாரதி பெருமாளைத் தரிசித்தோம் ( படிக்க ). அதற்குப் பிறகு நேற்று (18-10-2009) மாலைதான் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. மாலை 5 மணிக்குக் கிளம்பினோம்; கோயிலில் நுழையும்போது 5-45. பெருமாளின் தரிசனம் நன்கு கிடைத்தது. திருப்தியுடன் தரிசித்து விட்டு, கடைத்தெருக்களை பார்த்து விட்டு, ஆட்டோவில் வீடு திரும்பினோம். கோயில் புதுப்பிக்கப் பட்டுள்ளது; நிறைய விளக்குகள் போட்டு, ஒளிமயமாக உள்ளது. கர்ப்பக் கிரஹத்திற்கு அருகில் ஏசி வசதி பண்ணி இருக்கின்றனர். பல இடங்களில் RAMP வசதி பண்ணப்பட்டுள்ளது. ராஜப்பா 19-10-2009 0700 மணி

மெரீனா கடற்கரை (4)

நேற்று (17-10-2009) காலை 6-45க்கு நான் மெரீனா கடற்கரை சென்றேன். வானொலி நிலைய்த்திலிருந்து நடக்க ஆரம்பித்து, கண்ணகி சிலையையும் தாண்டி கொஞ்ச தூரம் நடந்த பின்னர், திரும்ப கண்ணகி சிலைக்கு வந்து, பஸ் பிடித்து வீடு திரும்பினேன். நல்ல நடை. இன்று ஞாயிறு (18-10-2009) காலை 6-30க்கு கிளம்பி, பஸ்ஸில் கண்ணகி சிலை வரை சென்று, அங்கிருந்து நடக்க ஆரம்பித்து, Napier bridge, ஜார்ஜ் கோட்டையைத் (Fort St George) தாண்டி ரிஸர்வ் வங்கி வரை நடந்தேன். பின்பு அங்கிருந்தே பஸ் ஏறி வீடு திரும்பினேன். ராஜப்பா காலை 0930 18-10-2009

மற்றும் ஒரு தீபாவளி

இன்று (17-10-2009) தீபாவளிப் பண்டிகை. எங்களுக்குக் கிடையாது (பெரிய மன்னி காலமானதால்). போன வருஷமும் தீபாவளி கொண்டாடவில்லை (கிரிஜா காலமாகி ஒரு வருஷம் நிறைவடையாததால்). வழக்கம்போல விடியற்காலம் 4-30 க்கு எழுந்து, நீராடி, பாராயணங்கள் பண்ணி, கீதை படித்து, பின்னர் 7 மணிக்கு மரீனா கடற்கரை சென்றேன். அங்கு 45 நிமிஷங்கள் நடந்தபின், வீடு திரும்பினேன். பல பேர் போனில் வாழ்த்து தெரிவித்தனர். விஜயா குலாப் ஜாமூன், ஓமப்பொடி பண்ணினாள்.   குழந்தை அதிதி மிகவும் மகிழ்ச்சியாக மத்தாப்புக்கள் கொளுத்தினாள். ராஜப்பா 09:30 17-10-2008

விஜயாவின் 60 ஆம் பிறந்த நாள் விழா

ஏற்பாடுகள் குறித்து இங்கு படித்தோம் . இனி விழா. ஞாயிறு, 20-09-09 காலை 11-30 மணிக்கு அருண், காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம் வந்தனர்; பகல் 3-45க்கு ஸ்ருதி வந்தாள். பூந்தமல்லியிலிருந்து தனியாகவே வந்துவிட்டாள். இரவு 7-30க்கு சாவித்திரி, ரமேஷ், விஜி, கார்த்திக், வசந்த் வந்தனர். வெளியில் சாப்பாட்டிற்கு ஆர்டர் பண்ணியிருந்தோம் - சப்பாத்தி, டால், ஸப்ஜி, சாப்பிட்டு விட்டு, ரமேஷும், விஜியும் வீட்டிற்குத் திரும்பினர். திங்கள், 21-09-2009 விழா. விடியற்காலை 4-30 க்கு நானும், க்ருத்திகாவும் எழுந்துகொண்டோம். பின்னர் விஜயா முதலானோர் ஒவ்வொருவராக எழுந்து, குளித்தனர். 7-45 க்கு இந்திரா, அகிலா, ராஜா, ஜ்யோத்ஸ்னா வந்தனர். காலை டிஃபன் பொங்கல் - க்ருத்திகா பண்ணினாள். சாஸ்திரிகள் 5 பேர் வந்தனர்; 9-15 க்கு ஆரம்பித்தனர். சுகவனம், சுதா, சந்தர், தனுஷ், விஜயராகவன், மாமி, சரோஜா, அத்திம்பேர், ஜெயராமன், கல்யாணி, பூர்ணிமா, மங்களம், சுதன், விஜி, ஜனனி, பாலு மாமா, TSG மாமா, மாமி, பிரகாஷ், ராஜேஸ்வரி, லக்ஷ்மி, மேல்வீட்டு சுரேகா ஆகியோர் வருகை தந்து விழாவை சிறப்பித்தனர். ஹோமங்கள் 11 மணிக்கு நிறைவடைந்தன.

விஜயாவின் 60-ஆம் பிறந்த நாள் - ஏற்பாடுகள் Vijaya's 60th birthday

விஜயாவின் பிறந்த நாள் 23-09-1949 . இந்த வருஷம் 60 முடிவடைகிறது. நக்ஷத்திர (சித்திரை) பிரகாரம் பிறந்த நாள் செப்டம்பர் 21-ஆம் தேதி வந்தது. அன்று கோயிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை மட்டும் செய்துவிட்டு வந்துவிடலாம் என எண்ணியிருந்தோம். விஷயத்தை அறிந்த அருண்-காயத்ரி, அஷோக்-நீரஜா, அர்விந்த்-க்ருத்திகா ஆகியோர் இதை சிறப்பாக கொண்டாட முடிவெடுத்தனர். சனிக்கிழமை, 12-09-2009 அன்று சாஸ்திரிகளிடம் கேட்டேன் - ஆயுஷ்ஹோமமும், ம்ருத்யுஞ்ச ஹோமமும் பண்ணலாம் என்றார். சாமான்கள் பட்டியலை தந்தார். ஞாயிறு, 13-09-09 எல்லாருக்கும் நானும், க்ருத்திகாவும் ஃபோன் செய்து அழைத்தோம். அ ன்று மாலை நானும் விஜயாவும் புரசைவாக்கம் ஸ்ரீகிருஷ்ணா கலெக்‌ஷன் கடைக்குச் சென்று அருண், அஷோக், அர்விந்த் மூவருக்கும் ஷர்ட், சதீஷுக்கு ஒரு டி-ஷர்ட், மூன்று குழநதைகளுக்கும் தலா இரண்டு ட்ரெஸ்கள் வாங்கினோம். மொத்தம் 4502.00+1960.00 மறுநாள் (திங்கள், 14-09-2009 ) மத்தியானம் 12 மணிக்கு நான், விஜயா, க்ருத்திகா, அதிதி ஆகியோர் காரில் தி.நகர் சென்றோம்; காயத்ரி அங்கு வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டாள். RmKV யில் பார்த்து விட்டு, குமரன் சென்று காய

வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் - கீதை

VELUKKUDI SRI KRISHNAN SWAMIGAL - GITA ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் பொதிகை டீவியில் தினமும் காலை கீதை உபன்யாஸம் செய்து வருவது யாவருக்கும் தெரியும். 2007, ஜனவரி 18-ஆம் தேதி இதை ஆரம்பித்தார். விஜயாவும், நானும் விடாமல் உபன்யாஸத்தைக் கேட்டு வருகிறோம். இன்று (18-09-2009, வெள்ளிக்கிழமை) 700 -வது நாள். கீதையில் மொத்தம் 700 ஸ்லோகங்கள் உள்ளன. இன்றோடு முடிந்திருக்க வேண்டாமா என்ற ஸந்தேஹம் வருவது நியாயமே. ஒவ்வொரு அத்தியாயம் (கீதையில் மொத்தம் 18 அத்தியாயங்கள்) ஆரம்பிக்கும் அல்லது முடிக்கும் போது அந்த அத்தியாயம் குறித்த விசேஷ வ்யாக்யானங்கள் சொன்னதால், இன்னும் சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள் 29 மீதி உள்ளன. பலமுறை எழுதியது போல, விடியற்காலை 4-30 க்கு எழுந்து, குள்ளக் குளிரக் ”குடைந்து” நீராடி, தூயோமாய் வந்து, வங்கக் கடல் கடைந்த மாதவனை, கேசவனை மனத்தினால் சிந்தித்து, வாயினால் பாடி, மாமாயன், மாதவன், வைகுந்தனென்றென்று நாமம் பலவும் நவில ... எனக்கு ஒரு மன உறுதியை, த்ருதியை எனக்கு அளித்தது, வேளுக்குடியும், அவரது உபன்யாஸமும், ஸ்ரீகிருஷ்ண பகவானும் தான். தமேவ சரணம் கச்ச ஸர்வ பாவேன பாரத தத் ப்ராஸாதாத் பராம் சா

மெரீனா கடற்கரை (3)

மெரீனா கடற்கரையில் நடப்பதைப் பற்றி இதுவரை இரண்டு பதிவுகள் எழுதியுள்ளேன்; பின்பு புது ஷூ வாங்கியதையும் எழுதினேன். இன்று (12-09-2009) சனிக்கிழமை காலை 0610 க்கே மெரீனா சென்றேன்; விஜயாவும் வந்தாள். கலங்கரை விளக்கத்திலிருந்து தமி ழர் பண்பாட்டுச் சின்னம் கண்ணகி சிலை வரை 35 நிமிஷங்கள் நடந்தபின்னர் பஸ்ஸில் வீடு திரும்பினோம். ராஜப்பா 12-09-2009 1000 மணி

பல வருஷங்களுக்குப் பிறகு ...

பல வருஷங்களுக்குப் பிறகு - அது இருக்கும் 14,1 5 வருஷங்கள் அல்லது அதற்கும் மேல் - நேற்று (8-9-2009) நான் ஷூ வாங்கினேன் !! நீண்ட நாட்களாகவே தினமும் காலையில் 7 மணிக்கு நடப்பதை (walking) வழக்கமாகக் கொண்டுள்ளேன். சமீபத்தில் மெரீனா கடற்கரையிலும் நடக்க ஆரம்பித்தேன் (என்னுடைய blog படிக்க). என்னைத் தவிர மற்ற எல்லாரும் (10 வயசிலிருந்து 90 வயசு வரை, ஆண்கள் மற்றும் பெண்கள்) மெரீனாவில் நடக்கும் போது காலில் ஷுவுடன் நடப்பதாக என் மனத்தினுள் ஒரு குறுகுறுப்பு. எனவே நானும் ஷூ கட்சியில் சேர்ந்து விட்டேன் - இன்று காலை புது ஷுவுடன் நடந்தேன் !! ராஜப்பா 10:15 மணி 09-09-09

மீண்டும் மெரீனா ...

இன்று (5-9-2009) காலை நான் மீண்டும் மெரீனா கடற்கரை சென்றேன். கலங்கரை விளக்கம் பஸ் நிறுத்தத்தில் ஏழு மணிக்கு இறங்கி, கண்ணகி சிலை வரை நடந்தேன். சரியாக 30 நிமிஷங்கள் ஆகின்றன. இன்று வெயில் அவ்வளவாக இல்லை. நடக்க நன்றாக இருந்தது. கடலும் தகதகவென பிரகாசித்தது. பஸ் பிடித்து வீடு திரும்பினேன். இன்னொரு இனிமையான காலைப் பொழுது. மெரீனா கடற்கரையும், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலும் சென்னைக்கு புகழ் சேர்க்கும் இரண்டு அணிகலன்கள்; இரண்டுமே மயிலாப்பூரில். ராஜப்பா 11:00 மணி, 05-09-2009

மெரீனா கடற்கரை

ரொம்ப நாட்களாகவே எனக்குள் ஒரு ஆசை - மெரீனா கடற்கரை ஓர நடைபாதையில் நடக்க வேண்டும் என்பதே என் ஆசை. 2005-ல் கற்பகம் அவென்யூவிற்கு வந்ததுமுதல் இந்த ஆசை மீண்டும் துளிர்விடத் துவங்கியது. மாலை வேளைகளில் பலமுறை சென்றிருக்கிறேன்; காலை வேளையில்?இன்றுவரை போக இயலவில்லை. இன்று (30-08-2009) காலை 6-40க்கு பீச்சுக்கு கிளம்பினேன்; 6 மணிக்கே போக வேண்டும் என்ற என் எண்ணம் 40 நிமிஷம் பின்தங்கிவிட்டது. 6-50க்கு உழைப்பாளர் சிலை அருகில் இறங்கி, கண்ணகி சிலை வரை திருப்தியாக நடந்தேன். நடைபாதையை பளபளவென்று பண்ணியிருக்கிறார்கள். மனித இனத்தின் “kaleidoscope" என்று சொல்வார்களே, அதை - பலதரப்பட்ட மனிதர்களை அங்கு பார்க்க இயலும். நடக்க முடியாத வயதானவர்கள், காதில் iPod-டுடன் ஓடும் இளைஞர்கள், இளைஞிகள் சிரித்து பேசி விளையாடும் குழந்தைகள், கடல் மணலையே படுக்கையாக உறங்கும் ஏழைகள், கப்பல் போன்ற கார்களில் வரும் பணக்காரர்கள். மேலே தகதகவென காலை சூரியன், வங்கக் கடல் வீசும் லேசான கொண்டல் காற்று, சென்னை இன்னும் முழுதாக விழித்துக் கொள்ளாததால் ஆரவாரமற்ற காமராஜர் சாலை - ஓ, மிக ரம்மியமான சூழ்நிலை. 45 நிமிஷங்கள் நடந்தபின்னர், பஸ் பி

திருப்பாதிரிப்புலியூர் கோயில்கள் Amma 100th Birthday, 23Mangalam, Gopi July 2009

இந்த வருஷம் (2009), ஜூலை 23, 24 தேதிகளில் நானும், விஜயாவும் திருப்பாதிரிப்புலியூர் சென்றோம். அங்குள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கும், ஸ்ரீ பாடலீஸ்வரர்க்கும், ஸ்ரீ ப்ருஹந்நாயகி அம்மனுக்கும் அபிஷேகம் /அர்ச்சனை செய்வதாக திட்டம். வரும் ஆகஸ்ட் 14, 2009 ஆடிக்கிருத்திகை அன்று அம்மாவிற்கு (ஸ்ரீமதி சம்பூரணம் அம்மாள்) 100-வது பிறந்தநாள் வருவதை ஒட்டி தானதர்மங்களும், அபிஷேக, அன்னதானங்களும் செய்து அம்மாவின் நினைவை கொண்டாடலாம் எனத் திட்டமிட்டோம். அபிஷேகங்கள் / அர்ச்சனைகளை சென்னையில் செய்வதை விட, அம்மா 35 வருஷங்களுக்கு மேல் வசித்த திருப்பாதிரிப்புலியூர் கோயில்களில் செய்தால் இன்னும் நிறைவாக இருக்குமே எனத் தோன்றியது. திடீரெனத் தோன்றிய இந்த எண்ணத்தை விரைவாக செயல்படுத்தினோம். ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை முடித்தேன். அர்விந்த் தன் காரை எடுத்துப் போகுமாறு சொன்னான். முதலில் அருணைத்தான் கார் கேட்டிருந்தேன்; அவனும் தர ஒப்புக்கொண்டிருந்தான்; இடையில் அர்விந்த் வெளியூர் செல்லவேண்டி வந்ததால், அவனது காரையே பயன்படுத்தினோம். சாவித்திரியை வருகிறாயா என அழைத்தேன்; சந்தோஷமாக சம்மதித்தாள்; மங்களமும் அவ்வாறே ச

அடையாறு பூங்கா Adyar Poonga

அடையாறு பூங்கா சென்னை நகரின் இரண்டு நீர்வழிப் பாதைகளான கூவம் மற்றும் அடையாறு நதிகள், கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. இந்த 2 ஆறுகளிலும் கழிவு நீர் மிகப்பெரிய அளவில் கலப்பதால், ஆற்று நீரும், அதன் சுற்றுப்புற சூழலும் மிக மோசமாக உள்ளன. இந்த சீர்கேட்டை மாற்றுவதற்காக எடுக்கப்பட்டு வரும் தமிழக அரசின் ஒரு முக்கிய திட்டம் - அடையாறு பூங்கா. அடையாறு கடலில் கலக்குமிடத்திலிருந்து திரு.வி.க. பாலம் வரையில் உள்ள 358 ஏக்கர் இடம் அடையாறு கழிமுக பகுதியாகும். இதிலும், செட்டிநாடு அரண்மனையிலிருந்து, பட்டினப்பாக்கம் வழியாக மந்தைவெளிப்பாக்கத்தில் முடியும் 58 ஏக்கர் பரப்பை மேம்படுத்தி அடையாறு பூங்காவாக ஆக்குவது குறிக்கோள். கடல்சூழ் நீர்- சதுப்பு நிலப்பரப்புகளில் வாழும் இந்திய அல்லது வெளிநாடுகளிலிருந்து வரும் 200-க்கும் மேலான பறவை இனங்கள் வேகமாக அழிந்து வரும் (extinct) ஆபத்தான நிலையில் உள்ளன. இந்தப் பறவைகள் வந்து தங்குவதற்காக பூங்காவின் சதுப்பு நிலங்களை அகழ்ந்து உப்புநீர் பரப்பாக ஆக்கியுள்ளனர். இந்த நீர்ப் பரப்பில் தற்போது வெள்ளை நிற கொக்குகளும், கறுப்பு நிற வாத்துக்களும் காணப்படுகின்ற

Sri Ramajayam Naama

நேற்று (06-07-2009) காலை 8 மணி அளவில், விஜயாவும் நானும் மாம்பலம் சென்றோம். லஸ்ஸிலிருந்து 12G பஸ்ஸில் அங்கு போனோம். (உமா) சுந்தரின் அண்ணா முரளீதரனின் மகனுக்குக் கல்யாணம். மங்களமும், கோபியும் எங்களுடன் 12G யில் வந்தனர். வழக்கமான காலை சிற்றுண்டி, மதிய உணவிற்குப் பின், அங்கிருந்து கிளம்பினோம். இடையில், மாம்பலம் விநாயகர் தெருவிலுள்ள ஸ்ரீராம் மந்திருக்கு சென்றோம்; ராமமூர்த்தி அத்திம்பேர், கோபி, மங்களமும் வந்தனர். இந்த இடத்தில் “ஸ்ரீராம நாம வங்கி” உள்ளது. சென்னை மற்றும் பல இடங்களில் பலரும் எழுதும் ஸ்ரீராமஜெயம் நாம நோட் புஸ்தங்களை இங்கு சேமித்து வருகின்றனர். இது (ஜூன் 2009) வரை 500 கோடி நாமாக்கள் சேர்ந்துள்ளன. அழகாக, பத்திரமாக இவற்றை பாதுகாத்து வைத்துள்ளனர். எண்ணிக்கை 1000 கோடியானதும், எல்லாவற்றையும் அடித்தள்த்தில் வைத்து, மேலே ஸ்ரீராமனுக்குக் கோயில் கட்ட எண்ணியுள்ளார்கள். 2011 ஆரம்பத்தில் இது நடக்கும் எனச் சொன்னார்கள். பார்க்க பரவசமாக இருக்கிறது. உங்கள் வீட்டில் ஸ்ரீராமஜெயம் நாமா எழுதிய புஸ்தகங்கள் இருந்தால், அவற்றை இங்கு கொண்டு வந்து கொடுத்து 1000 கோடி முயற்சியில் நீங்களும் பங்கு பெறுங்கள்.

ஸ்ரீகிருஷ்ண லீலா - விஷாகா ஹரி VISHAKHA HARI Day3

28 ஜுன் 2009 ஞாயிற்றுக்கிழமை (நாள் 3) இன்று நாங்கள் வழக்கத்தை விட 5 நிமிஷங்கள் தாமதமாக ஆஸ்திக ஸமாஜத்தை அடைந்தோம். வாசலில் குங்குமம், சந்தனம், சர்க்கரை, கல்கண்டு கொடுத்து "கல்யாண வரவேற்பு." வந்திருந்த பெண்மணிகள் அனைவருக்கும் மல்லிகைப் பூ கொடுத்தார்கள்! நிறையப் பேர் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புஷ்பம் அடங்கிய தாம்பாளங்களை எடுத்துவந்தனர். 4 - 5 பேர் பருப்புத்தேங்காய் (ஜோடி)கொண்டுவந்து மேடையில் வைத்தனர். நாம் வந்திருப்பது உபன்யாஸத்திற்கா, இல்லை இடம் மாறி கல்யாண மண்டபத்திற்கு போய்விட்டோமா என ஒரு கணம் வியந்து போனோம். மதுரா திரும்பி வந்தது. பல அஸுரர்களை அனுப்பியும் கண்ணனை கொல்ல முடியாததால், கண்ணனை மதுராவிற்கே அழைத்து கொல்ல கம்ஸன் திட்டமிட்டான். அக்ரூரன் என்பவனை அழைத்து, பிருந்தாவனம் சென்று கண்ணனை அழைத்து வருமாறு உத்தரவிட்டான். அக்ரூரனும் கோகுலம் புறப்பட்டான். அவன் கிருஷ்ண பக்தன் என்பதால் அவனுக்கு கொள்ளை ஆனந்தம், கண்ணனை நேரில், அருகில் பார்க்க இயலும் என்பதால். தனுர்யாகம் என்று அக்ரூரன் பொய்க்காரணம் சொன்னாலும், கண்ணனுக்கு உண்மை தெரியும். கம்ஸ வதத்திற்கு வேளை வந்துவிட்டது. ஆயர்பாடி ச

ஸ்ரீகிருஷ்ண லீலா - விஷாகா ஹரி VISHAKHA HARI Day2

27 ஜுன் 2009 சனிக்கிழமை (நாள் 2) கிருஷ்ணனின் லீலைகள் இன்றும் நாங்கள் மாலை 5 மணிக்கே ஆஸ்திக ஸமாஜத்திற்குச் சென்றுவிட்டோம். சரியாக 6-30க்கு ஸ்ரீமதி விஷாகா ஹரி தன் ஸங்கீத உபன்யாஸத்தை ஆரம்பித்தார். குழந்தை கண்னன் கோகுலத்தில் தன் அம்மா யஸோதாவிடம் செய்த லீலைகளுடன் உபன்யாஸம் களை கட்டியது. கண்ணன் மண் தின்றது. ஒரு நாள் பலராமனும், மற்ற சிறுவர்களும் யஸோதாவிடம் வந்து, கண்ணன் மண் தின்றதாக புகார் கூறினர். வாயைத்திறந்து காட்டுமாறு அவள் கேட்க, கண்ணன் தான் மண் திங்கவேயில்லை, பலராமனும், மற்றவர்களும் பொய் சொல்கிறார்கள் என்று சாதித்தான். யஸோதா விடாமல் வற்புறுத்தவே, கண்ணன் தன்னுடைய லீலையை ஆரம்பித்தான், குஞ்சு வாயை ஆவென்று திறந்து காட்டினான். பார்த்த யஸோதா வியப்பில் ஆழ்ந்தாள் - குழந்தையின் வாயில் அண்ட சராசரங்களும், பலப்பல கண்டங்களும், பாரத வர்ஷமும், பரத கண்டமும், அதனுள்ளே குட்டி கிருஷ்ணனும் - அந்த கண்ணன் வாயில் மீண்டும் அண்ட சராசரங்களும், கண்டங்களும், பாரத வர்ஷமும், மீண்டும் குட்டிக் கண்ணனும், அந்த குட்டிக் கண்ணன் வாயில் --- என தொடர்ந்து கொண்டே போயிற்று. யஸோதாவிற்கு "யார் இந்தக் குழந்தை" என ஒரே வி

ஸ்ரீகிருஷ்ண லீலா - விஷாகா ஹரி VISHAKHA HARI Day1

Day 1 : வெள்ளிக்கிழமை, 26 ஜூன் 2009 கண்ணன் பிறந்தான், எங்கள் கண்ணன் பிறந்தான். ஜூன் 26, 27, 28 தேதிகளில் ஆஸ்திக ஸமாஜத்தில் ஸ்ரீமதி விஷாகா ஹரியின் “ ஸ்ரீ கிருஷ்ண லீலா ” உபன்யாஸம் நடைபெறும் என்ற அறிவிப்பைப் பார்த்து, நேற்று (26) மாலை 5 மணிக்கும் முன்னதாகவே நானும் விஜயாவும் ஆஸ்திக ஸமாஜத்தில் ஆஜர். வழக்கம்போலவே கூட்டம் நிரம்பி வழிந்தது. சரியாக 6-30க்கு விஷாகா ஹரி உபன்யாஸத்தை ஆரம்பித்தார். பாரத தேசத்தில் யாருடைய புண்ய கதை அதிகமாக சொல்லப்படுகிறது, கேட்கப்படுகிறது, எழுதப்படுகிறது, படிக்கப்படுகிறது, பாட்டு எழுதப்படுகிறது, பாடப்படுகிறது என்று பார்த்தோமானால், அது ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றியதாகத்தான் இருக்கும். சந்தேகமேயில்லை. ஸ்ரீ கிருஷ்ணர் சரித்ரம் விஷ்ணுபுராணம், ஸ்ரீமத் பாகவதம் போன்று 4 நூல்களில் விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது என்றாலும், ஸ்ரீமத் பாகவதத்தில் இன்னும் விரிவாக் சொல்லப்பட்டிருப்பதால், தான் பாகவதத்தையே பின்பற்ற இருப்பதாக விஷாகா சொன்னார். ப்ரஹ்மா >> வஸிஷ்டர் >> சக்தி >> பராசரர் >> வ்யாஸர் இவர்கள் வம்சத்தில் வ்யாஸருக்கு மகனாகப் பிறந்தவர் ஸ்ரீசுகர் . அர்ஜுனனின் மகன

என்னுடைய புது செல் ஃபோன்

MY NEW CELL PHONE - SAMSUNG M200 அருண், அஷோக், அர்விந்த் மூவரும் சேர்ந்து 2006ஆம் வருஷம் ஜனவரி 31ஆம் தேதியன்று (எங்கள் திருமண நாள் பரிசாக) எனக்கு ஒரு செல்ஃபோன் வாங்கிக் கொடுத்தனர் - NOKIA Phone. Airtel-ன் lifetime package-ஐயும் வாங்கிக் கொடுத்தார்கள். இதுநாள் வரை இந்த ஃபோனை உபயோகித்து வந்தேன். திடீரென ஒருநாள் இதன் microphone பழுதுபட்டது. நான் பேசுவது எதிர்முனையில் கேட்காது. ஜூன் 6 (2009) அன்று மாலை அர்விந்த், விஜயா, அதிதியுடன் மயிலாப்பூர் விவேக் கடைக்குச் சென்று புதிதாக ஒரு ஃபோன் வாங்கினேன் SAMSUNG - M200. காமிரா (1.3 Mp), Video recording, FM recording, ஆகிய வசதிகள் உள்ளன. rajappa 11:20am on 07-09-2009

காஞ்சிபுரம் சென்றோம் Kanchipuram

KANCHIPURAM ஜூன் 4, 2009 காலை 0715க்கு, நான், விஜயா, கணேசன் ஆகிய மூவரும் ஒரு call taxi-யில் காஞ்சிபுரம் புறப்பட்டோம். இந்திராவும் வருவதாக இருந்தது, கடைசி நிமிஷத்தில் வர இயலாமற் போயிற்று. கணேசன் சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் காஞ்சி செல்வது வழக்கம். நான்தான் நீண்ட வருஷங்களுக்குப் பிறகு செல்கிறேன். போரூர் ஸ்ரீபெரும்பூதூர் வழியாக காஞ்சி சென்றோம்; ஒன்றரை மணி நேரப் பயணம். முதலில், ஸ்ரீராமா கஃபேயில் இட்லி, தோசை சாப்பிட்டோம்; இந்த ஹோட்டல் 65 வருஷங்களாக் இருக்கும் புராதனமான ஹோட்டல். பின்னர், ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். இந்தக் கோயிலிற்குப் பக்கத்தில்தான் விஜயாவின் வீடு இருந்ததது. எங்கள் கல்யாணம் (31-01-1971) இந்தக்கோயிலின் அருகிலுள்ள ராஜகோபால் கல்யாண மண்டபத்தில் நடந்தது. கணேசனும், விஜயாவும் 45-50 வருஷங்கள் பின்னோக்கிச் சென்று பழைய இனிய நினைவுகளில் மூழ்கி விட்டனர். பின்பு, விஜயா படித்த Sri Somasundara Kanya Vidhyalaya (SSKV) ஸ்கூலிற்கு சென்றோம். இந்த SSKV ஸ்கூலில் இந்திரா, காமாக்ஷி, விஜயா, லலிதா ஆகிய நால்வரும் படித்தனர். விஜயா மீண்டும் பழைய நினைவுகளில் மூழ்கினாள். அ

ஒரு இனிமையான மாலைப் பொழுது

Bhaja Govintham திருப்பதி-திருமலா தேவஸ்தானம் நேற்று (31-05-2009, ஞாயிறு) விஜயவாடாவில் “பஜகோவிந்தம்” விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. காலை முதலே விஜயவாடா பக்தி மழையில் நனைய ஆரம்பித்தது. ஊர் முழுதும் கோவிந்த நாம ஸங்கீர்த்தனம்தான். மாலையில் அங்குள்ள ஒரு முனிசிபல் விளையாட்டு அரங்கில், பஜனைகள் ஆரம்பித்தன. பல மடாதிபதிகளும், TTDயின் தலைமை அதிகாரிகளும், சுற்றியுள்ள பல மாவட்டங்களிருந்து பொதுமக்களும், பஜனை மண்டலிகளும் அங்கு குழுமின. லக்ஷத்திற்கும் அதிகமானோர் அங்கு இருந்தனர். ஸ்ரீஹரி, ஸ்ரீவேங்கடேசா, ராமர், கிருஷ்ணர், ஹனுமந்தா ஆகியோர் மீது பஜனைப் பாடல்கள் பாடினார்கள். கூடவே லக்ஷம் பேரும் பாடியது கேட்கவே பரமானந்தமாகயிருந்தது. எங்கும் கோலாட்டம், கும்மி, நடனம் ... பார்க்க பரவசமாக இருந்தது. TTDயின் பக்தி channel SVBC யில் நேரடி ஒளிபரப்பு நான் பார்த்தேன். ஒரு இனிமையான மாலைப்பொழுது. முன்னதாக, 09-05-2009 ஞாயிறு அன்று,ஹைதராபாதில் Parade ground-ல் அன்னமாச்சார்யாவின் 601-வது பிறந்த நாள் விழாவை TTD ஏற்பாடு செய்தது. ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் தலப்பாகா என்னும் ஊரில் 9 மே 1408-ஆம் வருஷம் அன்னமாச்சார்யா பி

ஊறுகாய்கள் பலவிதம் ...

சீஸனுக்கு ஏற்றவாறு ஊறுகாய்கள் போடுவதில் விஜயா மிகவும் திறமைசாலி. முன்வைத்த காலை பின்வாங்காமல் “கருமமே கண்ணாயினார்” என்பதற்கேற்ப எப்படியும் ஊறுகாய்களை போட்டுவிடுவாள். # 1 மாவடு வெயிற்காலம் ஆரம்பிக்கும் மார்ச் மாஸத்தில் தெற்கு மாடவீதியில் மாவடுக்கள் கொட்டி இருக்கும். அந்தக் கடைகளைத் தாண்டி செல்லும்போது அவள் கண்கள் மின்னும். முதலில் சில நாட்கள் சும்மா பார்த்து விட்டு, ஒரு நாள் திடீரென முடிவெடுப்பாள். அன்று வாங்கிவிடுவாள். அன்றிரவே ஊறுகாய்க்கான ஆரம்ப வேலைகள் நடக்கும். அடுத்த 5-ஆம் நாள் தயிர் / மோர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மாவடு கிடைக்கும். இந்த வருஷம் (2009) மார்ச் 25-ஆம் தேதியன்று 5 படி (ரூ 20 / படி வீதம்) வாங்கி ஊறுகாய் போட்டாள்; பின்னர் ரமாவிற்கும் 5 படி வாங்கி ஹைதராபாத் அனுப்பினாள். # 2. ஆவக்காய் அருண், அர்விந்த், அஷோக், மற்றும் எனக்கு மிகவும் பிடித்த ஊறுகாய் இது. சூடான சாதத்தில் ஆவக்காயைப் போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் .... ஓ! நல்ல வெயில் காலத்தில்தான் மாங்காய்கள் கிடைக்கும். வழக்கமாக, கிருத்திகாவின் பெற்றோர் வீட்டிலிருந்து (அவர்கள் வீட்டில் மாமரம் உள்ளது) காய்கள்

ஸ்ரீ புரந்தர தாசர் சரித்ரம் Sri Purandaradasar Charithram

ஸ்ரீமதி விஷாகா ஹரியை (Smt VISHAKHA HARI) யாவரும் அறிவீர்கள். ஸீதா கல்யாணம் , ஸுந்தர காண்டம் , ப்ரஹ்லாத சரித்ரம் ஆகியவைகளுக்கு அடுத்து தற்போது இவர் “ஸ்ரீ புரந்தரதாசர் சரித்ரம்” என்னும் கதாகாலட்க்ஷேபத்தை DVD வடிவில் கொடுத்துள்ளார். ஸ்ரீமதி விஷாகா ஹரிக்கே உரித்தான அந்த இனிமைக் குரலில் ஸ்ரீ புரந்தரதாசரின் சரித்திரத்தை பாட்டாகவும் வசனமாகவும் அளித்துள்ளார். அருமையாக உள்ளது. பாண்டுரங்க விட்டல் மீதான பக்தி இன்னும் சுவை சேர்க்கிறது. கர்னாடக சங்கீதத்தின் “பிதாமகர்” என்று போற்றப்படுபவர் ஸ்ரீ புரந்தரதாசர். இவர் 4 லக்ஷத்திற்கும் அதிகமாக ஸ்வராவளிகள், ஜண்டைவரிசைகள், அலங்காரங்கள், கீதங்கள், கீர்த்தனைகள் ஆகியவைகளை இயற்றியிருக்கிறார். மஹாராஷ்டிர மாநிலம் பண்டர்பூரிலுள்ள, ஸ்ரீ பாண்டுரங்கனை (விட்டலை) இவர் துதித்து நாமசங்கீர்த்தனம் பண்ணியிருப்பது மிக விசேஷமானது. பெல்லாரி ஜில்லாவில் ஹம்பிக்கு அருகில் புரந்தரகாட் என்னும் சிற்றூரில் வரதப்பா நாயக்கர் - கமலாம்பாள் தமபதியருக்கு சீனிவாச நாயக்கனாக இவர் 1484ல் பிறந்தார். நிறைய சங்கீத ஞானமும், மொழியறிவும் கொண்டவர். லக்ஷ்மிபாய் (சரஸ்வதிபாய்??) என்பவரை மணந்தார்.

சென்னை மாநகர பேருந்துகள்

CHENNAI BUSES நேற்று வியாழன் 30-04-2009 மாலை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். A1 சொகுசு பஸ். கண்டக்டரிடம் 50 ரூபாய் தாளை நீட்டி “மந்தைவெளி ரெண்டு” என்றேன். “சார், டிக்கெட் 6 ரூபாய்தான், 6 ரூ கொடுங்க,” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. சொகுசு பஸ்ஸில் சென்ட்ரல் - மந்தைவெளி ஒரு ஆளுக்கு 7.50, ”இவர் என்ன 3 ரூ என்கிறாரே, சரியாகக் கேட்கவில்லையோ” என நினைத்து, “மந்தைவெளி ரெண்டு” என மீண்டும் அழுத்தி சொன்னேன். “மந்தைவெளிக்கு 3 ரூபாய்தான் சார்,” ஒரு புன்னகையுடன் பதில் வந்தது. பஸ்ஸில் இருந்த எல்லாருக்குமே ஒரே ஆச்சரியம், கண்டக்டர் என்ன, பணத்தை திருப்பிக் கொடுக்கிறாரே என்று கையிலுள்ள டிக்கெட்டை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள், கண்களை நம்ப முடியாமல். விசாரித்ததில், நேற்று விடியற்காலை தமிழக அரசு பஸ் டிக்கெட் fare-களை திடீரென குறைத்துவிட்டதாம். வெள்ளை போர்டு, மஞ்சள் போர்டு, M சீரிஸ், LSS, Express, மிதவை, சொகுசு என விதவித ரேஞ்சுகளில் ஓடிக்கொண்டிருந்த சென்னை மாநகர பஸ்கள் நேற்று காலை முதல் “நாம் எல்லோரும் சமமென்ப துறுதியாச்சு” என எல்லா பஸ்ஸுகளும் இனி ஒரே ரேட்ட

தமிழ் சினிமா பழைய பாடல்கள்

VINTAGE SONGS FROM TAMIL FILMS 25-04-2009 சனிக்கிழமை . காலையில் மயிலாப்பூர் டைம்ஸ் பார்த்ததுமே, முடிவெடுத்து விட்டோம் - சாயங்காலம் PS High School-க்கு போவோம் என. பழைய தமிழ் சினிமாப் பாடல்களை வீடியோவில் காண்பிக்க இருப்பதாக அந்த அறிவிப்பு சொன்னது. மாலை 6-10க்கு ஹாலுக்குப் போய்விட்டோம் - கூட்டம் அவ்வளவு இருக்காது என எண்ணிய எனக்கு, வியப்பு - 120க்கும் மேலாக வந்திருந்தனர். Dr சுதா சேஷய்யனுக்குக் கூட இவ்வளவு பேர் வரவில்லை, போன வாரம். 1940-50 களில் வந்த தமிழ் சினிமா பாடல்களோடு நிகழ்ச்சி ஆரம்பமானது - சிவகவி யில் (1943) MK தியாகராஜ பாகவதரின் வஸந்த ருது தான் முதல் பாட்டு. பின்னர் சகுந்தலை யில் GNBயும் MS-ம் சேர்ந்து பாடிய பாட்டு. MS எவ்வளவு இளமையாக காணப்படுகிறார்! ஜெமினியின் அபூர்வ சகோதரர்களி லிருந்து பானுமதி பாடிய “ ஆடுவோமே, கீதம் பாடுவோமே” அடுத்த பாட்டு. “ நீல வானும் நிலவும் போல ” -இது பொன்முடி பாட்டு. பின்பு இதயகீதம் பட பாட்டு. மந்திரிகுமாரி படத்தின் புகழ்பெற்ற “ உலவும் தென்றல் ஓடம் இதே ...” க்குபிறகு, வனசுந்தரி படப்பாட்டு. பாதாளபைரவி யின் “ காதலே தெய்வீக காதலே ” தொடர்ந்தது. “

Kamba Ramayanam

எல்லாரும் சுதா சேஷய்யன் பற்றிய blogpost படித்திருப்பீர்கள். இதோ கம்பரின் எழுத்தோவியம் உங்கள் முன்னால் கைகேயி சுமந்திரனை கூப்பிட்டு, ஸ்ரீராமனை அழைத்து வருமாறு சொன்னாள். எதற்கென்று காரணம் தெரியாத சுமந்திரன், மகிழ்ச்சியோடு போய் ஸ்ரீராமனை அழைக்கிறான். 'கொற்றவர், முனிவர், மற்றும் குவலயத்து உள்ளார், உன்னைப் பெற்றவன் தன்னைப் போலப் பெரும்பரிவு இயற்றி நின்றார்; சிற்றவை தானும், "ஆங்கே கொணர்க!" எனச் செப்பினாள் அப்பொன் தட மகுடம் சூடப் போகுதி விரைவின்' என்றான். 85 (சிற்றவை - சித்தி) ஏழ்-இரண்டு வருஷங்களுக்கு வனவாஸம் போகுமாறு ஸ்ரீராமனிடம் கைகேயி சொல்கிறாள்: ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த் தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந் தவம் மேற்கொண்டு, பூழி வெங் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி, ஏழ்-இரண்டு ஆண்டின் வா" என்று, இயம்பினன் அரசன்' என்றாள். 111   இப்பொழுது, எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? - யாரும்செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்டஅப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா! 112

Dr சுதா சேஷய்யன் - கம்ப ராமாயணம்

Dr Sudha Seshayyan and Kamba Ramayanam “ சுதா சேஷய்யன் இன்று மாலை மயிலாப்பூர் PS High School-ல் ஸ்ரீராம அவதாரம் என்கிற தலைப்பில் உரையாற்றுவார்” என்ற செய்தியை நேற்று காலை (18-04-2009) மயிலாப்பூர் டைம்ஸில் பார்த்தவுடன், இந்த நிகழ்ச்சிக்குத் தவறாமல் போகவேண்டும் என விஜயாவும், நானும் தீர்மானித்துக் கொண்டோம். சுதா சேஷய்யன் அவர்கள் ஒரு தலைசிறந்த சொற்பொழிவாளர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். கம்ப ராமாயணத்தை “ கரைத்துக் குடித்து ” அதில் “ முழுகி எழுந்தவர் " . அவரது கம்ப ராமாயண சொற்பொழிவுகள் மிக பிரசித்தம். தமிழில் நல்ல புலமை. (ஆங்கிலத்திலும்). அவரது சொல்லாற்றலும், தடையில்லா சொல் பெருக்கும் கேட்க கேட்க ஆனந்தமாயிருக்கும். மாலை 5-45க்கு ஹாலை சென்றடைந்தோம்; எனக்கு வியப்பும், நிறைய ஏமாற்றமும். 80-85 நபர்கள் மட்டுமே அமரக்கூடிய ஒரு குட்டி ஹால்! இந்தச் சிறிய ஹாலிலா சுதா பேசப்போகிறார்?! “இருக்காது, தவறான இடத்திற்கு நாம் வந்துள்ளோம்” என நினைத்த போது, “இல்லை, சுதா சேஷய்யன் இங்குதான் பேச இருக்கிறார்” என்பது உறுதியாகியது. வழக்கம்போல, அவர் மிக நன்றாக சொற்பொழிவாற்றினார். ஸ்ரீராம அவதாரத்தி

மயிலாப்பூரும், மாவடுவும் .. Mylapore and Maavadu

கோடை காலத்திற்கான் முன் அறிவிப்பு அறிகுறிகளில், மயிலாப்பூர் தெற்கு மற்றும் வடக்கு மாட வீதிகளில் மாவடு வரவு முக்கியமான ஒன்று. தெற்கு மாட வீதியில் கொட்டி வைத்திருக்கும் மாவடுக்களை பார்க்கும்போதே நம் வீட்டு பெண்களுக்கு கைகள் உதற ஆரம்பித்து விடும்; உடம்பும் என்னவோ பண்ணும். அந்த க்ஷணமே மாவடுக்களை வாங்கி, ஊறுகாய் போட கை துறுதுறுக்கும். விஜயாவும் இந்த உலக நியதிக்கு விலக்கு அல்ல - விதவிதமாக ஊறுகாய் போடுவதில் அவள் ஒரு எக்ஸ்பர்ட். இந்த 2009 வருஷம் விஜயாவை முந்திக்கொண்டு விட்டாள் எங்கள் காயத்ரி! வாசலில் வந்தது என 2 படி மாவடு வாங்கி, விஜயாவிடமிருந்து செய்முறை கேட்டறிந்து, காயத்ரி ஊறுகாய் போட்டுவிட்டாள். ஊறுகாய்க்கு தேவைப்படும் கல்லுப்பு, மிளகாய்ப் பொடி (ஹைதராபாத் பொடி) ஆகியவைகளை விஜயா தயார் பண்ணிக்கொண்டு, மாவடு 5 படி (படி 20.00) வாங்கி ஊறுகாய் போட்டாள். இப்போது தினமும் தொட்டுக்க மாவடுதான். இதோ இன்று - 10 ஏப்ரல் - மயிலாப்பூரிலிருந்து ஹைதராபாத்துக்கு 5 படி மாவடு பயணம் செய்கிறது. ராஜப்பா 8:10 இரவு, 10-04-2009

தயிர் சாதமும் வாழைப்பூ மடலும்

Thayir Saadam and Vaazhaipoo madal *** adapted from what I read somewhere சொல்லி மாளுமா என்று தெரியவில்லை. வக்கணையாக செய்யப்பட்ட தயிர்சாதத்தை ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சாப்பிடலாம் என்றாலும் முதல் கட்டமாக சிலவற்றைச் சொல்லலாம். ஆவக்காய், எலுமிச்சை இதர ஊறுகாய் வகைகள், சாம்பார், குழம்பு, காய், கூட்டு, துவையல்… எல்லாவற்றையும் முந்திக் கொண்டு மாவடு. இன்னும் முக்கியமாக வேறு எதனோடும் சேராமல் அல்லது தயிர்சாதத்திற்கென்றே பிரத்யேகமாக ஜீவித்திருப்பது மோர்மிளகாய். எனக்குத் தெரிந்து வீட்டைத் தவிர ஹோட்டல்களில் சரவண பவனுக்குத்தான் இதில் முதலிடம். குறிப்புகள் இனி வரும். வாழைப்பூ கேள்விப்பட்டிருக்கலாம். அதற்கும் தயிர்சாதத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கும்முன் கொஞ்சம் சொந்தக் கதை. வாழைப்பூ வாங்கி உரிக்கும் நாளிலெல்லாம் எங்களுக்கு பாட்டி சாதம் பிசைந்து கையில் போடுவார். கைக்கு அடியில் வாழைப்பூவின் மடலில் ஊறுகாயை வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்துக்கொண்டால்(மாவடுவாக இருந்தால் ஒரு கடி கடித்து வாயிலேயே வைத்துக் கொள்ளலாம்.), அதில் பாட்டி சாதத்தைப் போட, அது பாட்டுக்கு அளவில்லாமல் உள்ளே இறங்கு

மயிலாப்பூர் கோயில் தேர் மற்றும் 63வர் உத்ஸவம்

Mylapore temple Ther and 63var Uthsavam 06-04-2009 திங்கட்கிழமை அன்று காலை மயிலாப்பூர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. விஜயாவும் நானும் 10-15க்கு சென்றபோது, தேர் வடக்குமாட வீதியில் இருப்பதாக அறிந்தோம். வடக்கு மாட வீதிக்குச் சென்று தேரில் உலா வந்த ஸ்வாமி, அம்மன், முருகன் ஆகியோரை தரிசித்தோம். கூட்டம் அதிகமாக இருந்தது. நிறைய இடங்களில் சக்கரைப் பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை, மோர் ஆகியவற்றை கொடுத்துக் கொண்டே இருந்தனர். வெயில் கொளுத்தியதால், தெருவில் தண்ணீரை ஊற்றிக்கொண்டே போனார்கள்; இந்த வருஷம் ஒரு தண்ணீர் லாரியை ஏற்பாடு செய்து அதிலிருந்து நீர் கொட்டுமாறு செய்திருந்தார்கள் - நல்ல யோசனை. 07-04-2009 செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணிக்கு 63 நாயன்மார்கள் ஊர்வலம். இதை பார்ப்பதற்கு லலிதாவும், குமாரும் ஆவடியிலிருந்து காலை 11-45க்கு வந்தனர். சாப்பிட்ட பிறகு 3-15க்கு அவர்கள் 2 பேர், நாங்கள் 2 பேர், சதீஷ் ஆகிய 5 பேரும் கோயிலுக்குப் புறப்பட்டோம். கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே ராமகிருஷ்ண மடம் தெரு, தெற்கு மாட வீதி வழியாக கோயில் கோபுரம் போனோம். கீழ வீதிக்குச் சென்று ஸ்வாமி, அம்மன், முருகன்

பொன்னை விரும்பும் பூமியிலே ...

பொன் (GOLD) ஒரு சேமிப்பாக கருதலாமா? அல்லது, சேமிப்பு (investment) என்ற முறையில் தங்கம் வாங்குவது அவ்வளவு சிறந்தது இல்லையா? மனதிலே ஆயிரம் எண்ணங்கள். இருந்தும், துணிந்து நேற்று மாலை - என் 67 வருஷ வாழ்க்கையில், விஜயாவின் 59 வருஷ வாழ்க்கையில் முதல் முறையாக - தங்கம் (காசு) வாங்கினோம், ஓரிரண்டு கிராம்களே. எதற்கும் “முதல் முறை” வேண்டுமல்லவா? பொன்காசு, மற்றும் பொன் நகைகள் வாங்கும்போது, பல சங்கேதக் குறியீடுகளை சந்திக்க வேண்டி வரும் - சேதாரம் (wastage) என்பது ஒன்று. தங்கத்தை உருக்கி நகையாக செய்யும்போது சில மைக்ரோகிராம்கள் நஷ்டமாகிவிடும்; இந்த இழப்பை நம்மிடமிருந்து பணம் வாங்கி ஈடு செய்து கொள்வார்கள். சேதாரம் என்பது செய்யும் நகையைப் பொறுத்தது. நாம் வாங்கும் கடையையும், அந்தக் கடைக்கு நாம் எவ்வளவு “விசுவாசமானவர்கள்” என்பதையும் பொறுத்தது. 15% லிருந்து 18% வரை சேதாரம் இருக்கக்கூடும். 16 கிராம் எடைக்கு நகை வாங்கினால், 16 கிராமுக்கு 15% ஆன 2.4 கிராம் தங்கத்திற்கு பணம் சேதாரமாக வசூலிக்கப்படும்! அடுத்த குறியீடு “செய்கூலி” (making charges) என்பதாகும். இதுவும் மேற்சொன்ன 3 விஷயங்களையே பொறுத்தது. சாதாரண வேலை

மயிலையே கயிலை, கயிலையே மயிலை

மயிலாப்பூரைப் பற்றிய அறிமுகம் - யாவரும் அறிந்த ஒன்றே. மயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாசத்தில் உத்ஸவம் நடைபெறும். இந்த வருஷம், நேற்று (31-03-2009) காலை கொடி ஏற்றப்பட்டது. நாளை (02-04-2009) விடியற்காலை 5-30 மணியளவில் வெள்ளி அதிகார நந்தி யில் ஸ்வாமி புறப்பாடு . 6 ஆம் தேதி திங்களன்று காலை திருத் தேர் . 7 ஆம் தேதி செவ்வாய் பகல் 2-55 க்கு 63-வர் உத்ஸவம் . 9 ஆம் தேதி வியாழனன்று இரவு திருக்கல்யாணம் . பங்குனி உத்ஸவத்திற்காக கோயில் மட்டுமல்ல, கோயிலை சுற்றியுள்ள மாட வீதிகளும், மற்ற தெருக்களும் அலங்கரிக்கப் பட்டு, அந்த சுற்றுப்புற சூழ்நிலையே பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது. எல்லாரும் வாருங்கள்; தேரையும், 63-வர் உலாவையும் தரிசித்து, ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீகபாலீஸ்வரரின் அருளை பூரணமாக பெறுங்கள். ராஜப்பா 01-04-2009 இரவு 8-15 மணி பதிவிற்கு பின்னூட்டம். இன்று (02 ஏப்ரல்) காலை 6 மணிக்கு நானும் விஜயாவும் கோயிலுக்குச் சென்றோம். வெள்ளி அதிகார நந்தி வாஹனத்தில் ஸ்ரீ கபாலீஸ்வரரை நன்கு கண்குளிர தரிசித்தோம். கோயில் முழுக்க கூட்டம். பல இடங்களில் கூட்டம் கூட்டமாக பலர